close
Choose your channels

'பொன்னியின் செல்வன்' படத்தில் இணைந்த 'நேர் கொண்ட பார்வை' நடிகர்!

Friday, December 20, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரபல இயக்குனர் மணிரத்னம் இயக்கிவரும் ’பொன்னின் செல்வன்’ படத்தின் படப்பிடிப்பு கடந்த சில நாட்களாக தாய்லாந்து நாட்டில் நடைபெற்று வருவது தெரிந்ததே. முதல்கட்ட படப்பிடிப்பில் கார்த்தி மற்றும் ஜெயம் ரவி நடித்து வருவதாகவும் இதனை அடுத்து மற்ற நடிகர்கள் இந்த படத்தின் படப்பிடிப்பில் விரைவில் இணைய இருப்பதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளது.

இந்த நிலையில் பொன்னியின் செல்வன் நாவலில் ஏகப்பட்ட கேரக்டர்கள் இருப்பதால் அந்த கேரக்டர்களில் நடிக்க அவ்வப்போது இந்த படத்தில் நடிகர்கள் இணைந்து வரும் செய்திகளை பார்த்து வருகிறோம்.

இதனை அடுத்து தற்போது தல அஜித் நடித்த ’நேர்கொண்டபார்வை’ திரைப்படத்தில் வில்லனாக நடித்த நடிகர் அர்ஜூன் சிதம்பரம் பொன்னியின் செல்வன் படத்தில் இணைந்துள்ளார். இவருக்கு இந்த படத்தில் முக்கிய வேடம் கொடுக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.

பொன்னியின் செல்வன் படத்தில் ஆதித்த கரிகாலன் கேரக்டரில் விக்ரம், வந்தியத்தேவன் கேரக்டரில் கார்த்தி, ராஜராஜசோழன் கேரக்டரில் ஜெயம் ரவி, நந்தினி கேரக்டரில் ஐஸ்வர்யா ராய், பூங்குழலி கேரக்டரில் ஐஸ்வர்யா லட்சுமி, சுந்தரசோழர் கேரக்டரில் சரத்குமார், குந்தவை கேரக்டரில் த்ரிஷா மற்றும் பிரபு, விக்ரம் பிரபு, ரகுமான், ஜெயராம், லால், அஸ்வின் உள்பட பலர் நடித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.