close
Choose your channels

விஜய் ஒன்றும் பெரிய ஆள் கிடையாது: அர்ஜூன் சம்பத் ஆவேசம்

Friday, June 10, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

விஜய் ஒன்றும் பெரிய ஆள் கிடையாது என்றும் அவர் தனது ரசிகர்களுக்கு அறிவுரை கூற வேண்டும் என்றும் அர்ஜுன் சம்பத் பேசியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

மதுரை ஆதீனத்திற்கு மதுரை மாநகர காவல்துறை பாதுகாப்பு அளிக்க வேண்டும் என அர்ஜுன் சம்பத் இன்று மதுரை காவல் ஆணையரிடம் மனு அளித்தார். அதன்பின் அவர் செய்தியாளர்களை சந்தித்தபோது மதுரை ஆதீனம் அரசியல்வாதிகளாலும் சினிமா ரசிகர்களாலும் அச்சுறுத்தப்படுகிறார் என்று கூறினார்.

மேலும் விஜய் ரசிகர்கள் ஆதினம் மீது தனிப்பட்ட கருத்துக்களை வெளியிடுகின்றனர் என்றும், அம்மா, அப்பாவை விட விஜய் ஒன்றும் பெரிய ஆள் கிடையாது என்றும் விஜய் தனது ரசிகர்களுக்கு அறிவுரை கூறவேண்டும் என்றும் அர்ஜுன் சம்பத் கூறியுள்ளார்

கடந்த சில நாட்களுக்கு முன்னர் மதுரை ஆதினம் மதுரையில் நடந்த ஒரு விழாவில் பேசியபோது, ‘விஜய் இந்து மதத்தை அவமதிக்கும் வகையில் வசனம் பேசுவதால் அவருடைய படத்தை பார்க்காதீர்கள் என்று கூறினார். அதற்கு விஜய் ரசிகர்கள் சமூக வலைதளங்களிலும் போஸ்டர் மூலமும் தங்களது கண்டனத்தை தெரிவித்து வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.