மாற்றத்தின் பயணம் விரைவில்: ரஜினிகாந்த் குறித்து அர்ஜூனாமூர்த்தி அறிக்கை

  • IndiaGlitz, [Wednesday,January 27 2021]

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கட்சி ஆரம்பிக்கவிருப்பதாக கூறியபோது அர்ஜூனாமூர்த்தி என்பவரை தனது கட்சியின் முக்கிய நிர்வாகியாக நியமனம் செய்தார். அதன்பின் உடல்நலம் காரணமாக அவர் அரசியல் கட்சி ஆரம்பிக்கவில்லை. இந்த நிலையில் ரஜினி குறித்து அர்ஜூனா மூர்த்தி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:

என்‌ உயிரினும்‌ மேலான தமிழக மக்களே, எனது சொந்தத்தின்‌ சொந்தங்களே, அனைவருக்கும்‌ எனது மனமார்ந்த நன்றிகள்‌, வணக்கங்கள்‌!

நமது சூப்பர்‌ ஸ்டார்‌ திரு. ரஜினிகாந்த்‌ அவர்கள்‌ என்னை நமது நாட்டிற்கு அறிமுகம்‌ செய்தது அனைவரும்‌ அறிந்ததே. இந்நிலையில்‌ நமது தலைவருக்கு உடல்நலம்‌ குறித்து மருத்துவர்கள்‌ கூறிய ஆலோசனையின்‌ காரணமாக அவர்‌ அரசியலில்‌ ஈடுபட முடியாமல்‌ போனதும்‌ நாம்‌ அறிந்த ஒன்று. இதனால்‌ மக்கள்‌ மற்றும்‌ ரசிகர்களுடன்‌ நானும்‌ வேதனை அடைந்தேன்‌.

இதற்கு ஈடு செய்யும்‌ வகையில்‌ நமது சூப்பர்ஸ்டார்‌ ரஜினிகாந்த்‌ அவர்களின்‌ நீண்ட கால அரசியல்‌ மாற்றத்தின்‌ நினைவானது நிச்சயமாக நிகழ வேண்டும்‌ என்று இறைவனிடம்‌ பிரார்த்தனை செய்து, நமது தமிழகத்தின்‌ அரசியல்‌ மாற்றம்‌ ஆட்சி மாற்றம்‌ இப்ப இல்லைன்னா எப்போது? என்று சொல்லிய சூப்பர்‌ ஸ்டார்‌ அவர்களின்‌ நல்ல எண்ணம்‌, நல்ல மனது, நம்‌ தமிழகத்தின்‌ மீது கொண்ட அக்கறை நிறைவேறும்‌
என்று நம்புங்கள்‌.

தற்போது நமது தலைவர்‌ ஒரு நடிகராக, அவரது தொழில்‌ தர்மத்தின்‌ காரணமாக, அவரது பெயருக்கும்‌, புகழுக்கும்‌, களங்கம்‌ வரக்கூடாது என்ற காரணத்தால்‌ அவரது பெயர்‌, புகைப்படங்களை பயன்‌ படுத்த வேண்டாம்‌ என்று நான்‌ விரும்புகிறேன்‌. எனவே, என்னை மக்களுக்கு சேவை செய்ய வேண்டும்‌ என விரும்பி நாட்டிற்கு அறிமுகம்‌ செய்த அவர்களின்‌ பாதம்‌ தொட்டு வணங்கி நான்‌ மாற்றத்தின்‌ வழியில்‌ பயணித்து நல்லதொரு மாற்றத்தை தருவேன்‌ என நம்புகிறேன்‌.

எந்த சூழ்நிலையிலும்‌ எனக்கு தலைவர்‌ சூப்பர்‌ ஸ்டார்‌ ரஜினிகாந்த்‌ அவர்கள்‌ தான்‌. அரசியலில்‌ இல்லை என்றாலும்‌ எனக்கு தலைவர்‌ என்பதையும்‌ தாண்டி நானும்‌ ஒரு ரசிகன்‌ என்பதில்‌ பெருமை கொள்கிறேன்‌. அந்த அக்கறையில்‌ அவரது புகழுக்கு எந்த இடத்திலும்‌ கெட்ட பெயரை நாம்‌ ஏற்படுத்த மாட்டோம்‌. திரு சூப்பர்‌ ஸ்டார்‌ ரஜினிகாந்த்‌ அவர்களின்‌ ஆசிர்வாதம்‌ மட்டுமே போதும்‌. அவர்களின்‌ ஆசையை நாம்‌ நிறைவேற்றுவோம்‌.

மிக்க நன்றி, விரைவில்‌ மாற்றத்தின்‌ சேவகனாக உங்கள்‌ முன்‌...

இவ்வாறு அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது

More News

தண்ணீர் பக்கெட்டில் கவிழ்ந்த 2 வயது குழந்தை… பரிதாபச் சம்பவம்!

சங்கரன்கோவில் பகுதியில் விளையாடி கொண்டிருந்த இரண்டரை வயது குழந்தை ஒன்று தவறுதலாக தண்ணீர் பக்கெட்டில் கவிழ்ந்து உயிரிழந்தது. இச்சம்பவம் அப்பகுதியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

இது பாலியல்வாதிகளின் உலகம்: இளம் பாடகர் குறித்து சின்மயி சர்ச்சை கருத்து!

விஜய் டிவி சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி சமீபத்தில் தொடங்கிய நிலையில் இந்த நிகழ்ச்சியின் வீடியோ ஒன்றை தனது டுவிட்டரில் பதிவு செய்த பாடகி சின்மயி, 'இது பாலியல்வாதிகளின் உலகம் என்றும்,

இளைஞருக்கு முத்தம் கொடுக்க முயற்சிக்கும் பிக்பாஸ் ஜூலி: வைரல் வீடியோ

பிக்பாஸ் சீசன் 1 நிகழ்ச்சியில் கலந்துகொண்ட போட்டியாளர்களில் ஒருவரான ஜூலி அந்த நிகழ்ச்சியின் மூலம் கடும் விமர்சனங்களை பெற்றார். ஏற்கனவே ஜல்லிக்கட்டு மூலம் புகழ்பெற்றிருந்த ஜூலிக்கு

முடிந்தது 4 ஆண்டுகால சிறைவாசம்… சசிகலா விடுதலை!

சொத்துக் குவிப்பு வழக்கில் 4 ஆண்டு சிறை தண்டனை பெற்று கொரோனா தொற்று காரணமாக பெங்களூரு விக்டோரியா மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த சசிகலா இன்று விடுதலை செய்யப்பட்டார்.

சிவகார்த்திகேயனின் அடுத்த படத்தின் மாஸ் டைட்டில் அறிவிப்பு

நடிகர் சிவகார்த்திகேயன் நடிக்கவிருக்கும் அடுத்த படத்தின் அறிவிப்பு இன்று காலை 11 மணிக்கு வெளியாகும் என நேற்றே அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி சற்று முன்னர் சிவகார்த்திகேயனின்