சென்னை உள்பட உலகின் 7 நகரங்களில் திருமணம் செய்யும் காதல் ஜோடி

  • IndiaGlitz, [Friday,June 16 2017]

திருமணம் என்பது சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுவது என்றாலும் ஒரு ஜோடிக்கு ஒருமுறைதான் நிச்சயிக்கப்பட்டு திருமணம் நடைபெறுவதுண்டு. ஆனால் அமெரிக்காவை சேர்ந்த ஒரு காதல் ஜோடி உலகம் சுற்றும் ஜோடிகளாக மாறி ஏழு நகரங்களில் ஏழுமுறை திருமணம் செய்து வருகின்றனர்.

அமெரிக்காவை சேர்ந்த காதல் ஜோடியான திமோத்தி மற்றும் கேப்ரில்லா ஜோடிக்கு அமெரிக்காவில் திருமணம் நடந்தது. ஆனால் இந்த திருமணத்தில் திருப்தி அடையாத இந்த ஜோடி உலகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து விதவிதமாக திருமணம் செய்ய முடிவு செய்தனர்.

இதன்படி ஜப்பான் தலைநகர் டோக்கியோவுக்கு சுற்றுப்பயணம் செய்த இந்த ஜோடி அந்நாட்டு கலாச்சாரத்தின்படி கடந்த மே 18ஆம் தேதி திருமணம் செய்தனர்.

அடுத்ததாக இந்தோனேஷியாவில் உள்ள பாலி நகரில் இவர்களுடைய இரண்டாவ்து திருமணம் நெருங்கிய நண்பர் ஒருவரின் முன்னிலையில் நடந்தது.

பின்னர் மூன்றாவதாக நேபாள நாட்டில் உள்ள பேட்டன் என்ற நகரில் புத்த குருமார்களின் முன்னிலையில் ஜூன் 2ஆம் தேதி நடந்தது.

இந்த காதல் ஜோடியின் அடுத்த குறி நம்மூர் சென்னை. ஜூன் 7ஆம் தேதி சென்னையில் திமோத்தி பட்டுவேஷ்டியிலும், கேப்ரில்லா பட்டுச்சேலையிலும் ஜொலிக்க சுமார் 15 பேர் முன்னிலையில் மந்திரங்கள் முழங்க நான்காவதாக திருமணம் நடந்தது. சென்னையில் திருமணம் முடிந்ததும் இந்த ஜோடி மகாபலிபுரத்தில் சில் நாட்கள் தங்கியுள்ளனர்.

இந்த நிலையில் இவர்களது ஐந்தாவது முறை திருமணம் கென்யாவில் நடைபெறவுள்ளதாகவும், ஆறாவது திருமணம் அந்தரத்தில் அதாவது பராகுவேவில் பலூனில் நடைபெறவுள்ளதாகவும், கடைசியாக ஏழாவது திருமணம் ஆம்ஸ்டர்டாம் நகரில் நண்பர்களுடன் நடைபெறவுள்ளதாகவும் இந்த தம்பதியினர் தெரிவித்துள்ளனர்.

ஏழு முறை திருமணம் செய்து தங்களுடைய புதுவாழ்வை தொடங்கவுள்ள இந்த காதல் ஜோடிக்கு நம்முடைய வாழ்த்துக்களையும் தெரிவித்து கொள்கிறோம்.

More News

விஷ்ணுவின் 11வது அவதாரம் ஜெயலலிதா! சட்டசபையில் எம்.எல்.ஏ பேச்சு

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உயிருடன் இருக்கும்போதே அவரை கடவுளுக்கு நிகராக அதிமுகவினர் பொதுமேடைகளில் பேசுவதுண்டு. அதுமட்டுமின்றி ஆதிபராசக்தி, கன்னிமேரி வடிவில் அவருக்கு கட் அவுட் வைத்து சர்ச்சைக்குள்ளான கதையும் அனைவரும் அறிந்ததே...

நடிகை அஞ்சலிக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்

'நிஜமாத்தான் சொல்றியா' இந்த வசனத்தை எங்கே கேட்டாலும் உடனே 'கற்றது தமிழ்' படத்தில் அஞ்சலி பேசிய வசனம் தான் அனைவருக்கும் ஞாபகம் வரும். முதல் படத்திலேயே தனது நடிப்பு முத்திரையை பதித்து இன்று தமிழ், தெலுங்கு திரையுலகில் முன்னணி நாயகிகளில் ஒருவராக இருக்கும் நடிகை அஞ்சலிக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்...

காலா படத்தில் ரஜினியின் பெயரில் மற்றொரு நடிகர்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் ரஞ்சித் இயக்கி வரும் 'காலா' படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக மும்பையில் நடந்து வரும் நிலையில் இந்த படத்தில் தற்போது 'சென்னை 28' பட நடிகரும் வெங்கட்பிரபுவின் நண்பருமான அரவிந்த் ஆகாஷ் இணைந்துள்ளார்...

சூர்யா படத்தில் இணைந்த மேலும் ஒரு சீனியர் நடிகர்

சூர்யா, கீர்த்தி சுரேஷ் நடிப்பில் விக்னேஷ் சிவன் இயக்கி வரும் 'தானா சேர்ந்த கூட்டம்' படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது. இந்த படத்தின் டீசர் சூர்யாவின் பிறந்த நாளில் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது...

கர்ப்பம் குறித்த வதந்திக்கு நஸ்ரியாவின் நச் விளக்கம்

'நேரம்', ராஜா ராணி' உள்பட ஒருசில தமிழ்ப்படங்களில் மட்டுமே நடித்தாலும் நல்ல நடிகை என்ற பெயர் வாங்கியவர் நஸ்ரியா.