அருள்நிதியின் அடுத்த க்ரைம் துப்பறியும் படத்தின் டைட்டில் அறிவிப்பு!

  • IndiaGlitz, [Tuesday,July 21 2020]

வம்சம்’, ’மௌனகுரு’ ,’தகராறு’ ’டிமான்டி காலனி’ ’ஆறாது சினம்’ உள்பட ஒருசில திரைப்படங்களில் நடித்த அருள்நிதி நடிக்கவுள்ள அடுத்த படத்தின் டைட்டில் இன்று வெளியாகவிருப்பதாகவும், இந்த டைட்டிலை பிரபல இயக்குனர் வெற்றிமாறன் தனது சமூக வலைத்தளத்தில் வெளியாகவிருப்பதாகவும் வெளிவந்த செய்தியை ஏற்கனவே பார்த்தோம்.

இந்த நிலையில் இயக்குனர் வெற்றிமாறன் சற்றுமுன்னர் அருள்நிதியின் 14வது படத்தின் டைட்டில் ‘டைரி’ என்று அறிவித்துள்ளார். மேலும் அவர் இந்த படத்தின் டைட்டில் போஸ்டர் ஒன்றையும் வெளியிட்டுள்ளார். இன்னாசி பாண்டியன் இயக்கத்தில், ஃபைவ் ஸ்டார் கதிரேசன் தயாரிப்பில் ரான் எதான் யோஹனன் இசையில் சேகர் பாபு ஒளிப்பதிவில், ராஜாசேதுபதி படத்தொகுபில் இந்த படம் உருவாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் அருள்நிதி ஏற்கனவே சீனு ராமசாமி இயக்கத்தில் ஒரு திரைப்படமும், ’களத்தில் சந்திப்போம்’ என்ற திரைப்படத்திலும் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படங்களின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ள நிலையில் லாக்டவுன் முடிந்தவுடன் ‘டைரி’ படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என்று கூறப்படுகிறது.

More News

கருப்பர் கூட்டம் யூ ட்யூப் சேனலில் 500 வீடியோக்கள் நீக்கம்: சென்னை போலீசார் அதிரடி

கருப்பர் கூட்டம் என்ற 'யு டியூப்' சேனலில் சமீபத்தில் கந்தசஷ்டி கவசம் குறித்து சர்ச்சைக்குரிய ஒரு வீடியோ வெளியானதால் முருகபக்தர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

கீழடியில் ரூ.12.21 கோடி மதிப்பிலான தொல்பொருள் அருங்காட்சியகம்!!! அடிக்கல் நாட்டிய தமிழக முதலமைச்சர்!!!

2600 ஆண்டு பழமையான தமிழர் பண்பாட்டை பறைசாற்றும் வண்ணம் பல்வேறு தொல்லியல் பொருட்கள் சிவகங்கை அருகேயுள்ள திருப்புவனத்தில் கண்டெடுக்கப் பட்டது.

வேலூர் சிறையில் தற்கொலைக்கு முயற்சித்தாரா நளினி: பரபரப்பு தகவல்

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிக்கி கடந்த 28 ஆண்டுகளாக சிறையில் இருந்து வரும் ஏழு பேர்களில் நளினி மற்றும் அவரது கணவர் முருகன் ஆகிய இருவர் என்பது தெரிந்ததே

பார்ட்னர் ஷிப்பில் இந்திய-அமெரிக்க கப்பற்படை!!! அரண்டுபோன சில நாடுகள்!!!

இந்திய – சீன எல்லைப் பகுதியில் ஏற்பட்ட குழப்பம் கடந்த சில மாதங்களாக இருநாடுகளிடையே பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி வருகிறது.

சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணனின் குடும்பத்தினர் 4 பேருக்கு கொரோனா: அதிர்ச்சி தகவல்

தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணனின் மனைவி, மகன், மாமனார் உள்ளிட்ட நான்கு பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளதாக வெளிவந்த செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது