ஜோதிகா கேரக்டரை ஏற்கும் அருள்நிதி

  • IndiaGlitz, [Tuesday,February 21 2017]

'மொழி', 'அபியும் நானும்' உள்பட பல தரமான படங்களை இயக்கிய இயக்குனர் ராதாமோகன் இயக்கவுள்ள அடுத்த படமான 'பிருந்தாவனம்' படத்தில் அருள்நிதி நடிக்கவுள்ளார் என்பதை ஏற்கனவே பார்த்தோம். இந்நிலையில் இந்த படத்தில் அருள்நிதி காதுகேட்காத, வாய்பேச முடியாத மாற்றுத்திறனாளி கேரக்டரில் அவர் நடிக்கவுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது. இந்த செய்தியை அருள்நிதி தனது சமூக வலைத்தளத்தில் உறுதி செய்துள்ளார்.

ஏற்கனவே ராதாமோகன் இயக்கிய 'மொழி' படத்தில் இதேபோன்ற ஒரு கேரக்டரில்தான் ஜோதிகா நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. ஜோதிகா நடித்த அதே கேரக்டரில் அருள்நிதியும் நடிப்பதால் இந்த படம், மொழி படத்தின் இரண்டாம் பாகமாக இருக்குமோ? என்ற கருத்தும் வெளிவந்து கொண்டிருக்கின்றது. ஆனால் இதை இயக்குனர் தரப்பு உறுதி செய்யவில்லை.

விவேக் முக்கிய வேடத்தில் நடிக்கும் இந்த படத்தை வாசன் மூவீஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது. விஷால் சந்திரசேகர் இசையமைக்கும் இந்த படத்தில் அருள்நிதிக்கு ஜோடியாக பழம்பெரும் நடிகர் ரவிச்சந்திரனின் பேத்தி தான்யா ரவிச்சந்திரன் நடிக்கவுள்ளார்.

More News

வெளிமாநிலங்களில் இருந்து எனக்கு கொலை மிரட்டல் வருகிறது. சி.ஆர்.சரஸ்வதி

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவிற்கு பின்னர் அதிமுக, சசிகலா அணி, ஓபிஎஸ் அணி என இரண்டாக உடைந்தது.

கமலுடன் இணைந்த சமூக வலைத்தள இளைஞர்கள்

உலக நாயகன் கமல்ஹாசன் கடந்த சில நாட்களாக தனது சமூக வலைத்தளத்தில் தற்கால சமூக, அரசியல் நடவடிக்கைகளை விமர்சித்து வருகிறார்

கமல்ஹாசனை கைது செய்ய வேண்டும். போலீஸ் புகார் செய்த அரசியல் கட்சி

தமிழக அரசியல் நிகழ்வுகள் குறித்து மக்களிடம் வன்முறையை தூண்டும் வகையில் நடிகர் கமல்ஹாசன் நடந்து கொள்வதாக இந்திய தேசிய லீக் கட்சி சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளது

சிவகார்த்திகேயனின் 'வேலைக்காரன்'. ஃபர்ஸ்ட்லுக், ரிலீஸ் தேதி அதிகாரபூர்வ அறிவிப்பு

ஜெயம் ராஜா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வரும் படத்தின் டைட்டில் 'வேலைக்காரன்' என சிவகார்த்திகேயனின் பிறந்த நாளில் அறிவிக்கப்பட்டது என்பதை ஏற்கனவே பார்த்தோம்

சசிகலா தியாகி, ஓபிஎஸ் துரோகியா? விஜயசாந்திக்கு கடும் கண்டனம்

தமிழக சட்டசபையில் கடந்த சனிக்கிழமை நடந்த ஜனநாயக கேலிக்கூத்து அனைவரும் அறிந்ததே.