அருள்நிதியின் 'பிருந்தாவனம்' சென்சார் தகவல் மற்றும் ரன்னிங் டைம்

  • IndiaGlitz, [Wednesday,April 19 2017]

கோலிவுட் திரையுலகில் இளையதலைமுறை நடிகர்களில் ஒருவராகிய அருள்நிதி நடித்த 'மெளன குரு', 'டிமாண்டி காலனி' போன்ற படங்கள் வெற்றி பெற்ற நிலையில் அவர் நடித்து முடித்துள்ள படம் 'பிருந்தாவனம். பிரபல இயக்குனர் ராதாமோகன் இயக்கிய இந்த படத்தின் படப்பிடிப்பு மற்றும் போஸ்ட் புரடொக்ஷன்ஸ் பணிகள் முடிவடைந்து தற்போது ரிலீசுக்கு தயாராக உள்ளது.
இந்நிலையில் இந்த படம் இன்று சென்சார் செய்யப்பட்டு 'யூ' சான்றிதழ் பெற்றுள்ளது. இந்த படத்தின் ரன்னிங் டைம் 130 நிமிடங்கள் அதாவது இரண்டு மணி நேரம் பத்து நிமிடங்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
அருள்நிதி, தான்யா, விவேக், செல்முருகன் உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு விஷால் சந்திரசேகர் இசையமைத்துள்ளார். விவேக் ஆனந்த் ஒளிப்பதிவில், டி.எஸ்.ஜே படத்தொகுப்பில் உருவாகியுள்ள இந்த படத்தை வான்சன் மூவீஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. சென்சார் சான்றிதழ் கிடைத்துவிட்டதை அடுத்து மிக விரைவில் இந்த படத்தின் ரிலீஸ் தேதி அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படவுள்ளது.

More News

சிம்புவின் 'AAA' படத்தில் ஏற்பட்ட திடீர் மாற்றம்

மூன்று வித்தியாசமான வேடங்களில் சிம்பு நடித்து வரும் 'அன்பானவன் அசராதவன் அடங்காதவன்' திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வருகிறது.

ஆர்.கே.நகரில் ஆரம்பிக்கப்பட்ட புதிய பிசினஸ்கள் என்ன ஆச்சு?

சென்னை ஆர்.கே.நகரில் கடந்த மாதம் இடைத்தேர்தல் என்ற அறிவிப்பு வெளியானவுடன் அப்பகுதி மக்கள் வழக்கமான பார்த்து வந்த வேலையை தற்காலிகமாக கைவிட்டு புதிய வேலைவாய்ப்புகளை தாங்களாகவே உருவாக்கி கொண்டனர்.

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல்: இடைத்தரகர்கள் காட்டில் பெய்த மழை

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் ரத்து செய்யப்பட்டது ஏன் என்பது அனைவருக்கு வெட்ட வெளிச்சமாக தெரிந்த உண்மை பணப்பட்டுவாடாதான்.

ஸ்டார் ஓட்டலுக்கு நிகராக எகிறிய ஆர்.கே.நகர் வீட்டு வாடகை

ஸ்டார் ஓட்டல்களில் தங்க ஒருநாள் வாடகை ஆயிரக்கணக்கில் இருக்கும் என்பது அனைவரும் அறிந்ததே.

பணப்பட்டுவாடா: ஆர்.கே.நகரில் நடந்த நல்ல விஷயங்கள்

சென்னை ஆர்.கே.நகரில் அதிகளவிலான பணப்பட்டுவாடா நடந்த காரணத்தால் இடைத்தேர்தல் ரத்து செய்யப்பட்டது என்பது அனைவரும் அறிந்ததே.