close
Choose your channels

இறுதிக்கட்ட படப்பிடிப்புக்காக 'சிங்கம்' லொகேஷனுக்கு செல்லும் 'யானை' படக்குழு!

Wednesday, October 13, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரபல இயக்குனர் ஹரி இயக்கத்தில், அருண் விஜய் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ‘யானை’. இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வரும் நிலையில் தற்போது இந்த படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு தூத்துக்குடியில் நடைபெற இருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.

’சிங்கம்’ படத்தின் மூன்று பாகங்களும் தூத்துக்குடியில் படப்பிடிப்பு நடந்த நிலையில் சென்டிமென்டாக இந்த படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பும் தூத்துக்குடியில் நடந்த இயக்குனர் ஹரி திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் இந்த மாதத்திற்குள் ‘யானை’ படத்தின் படப்பிடிப்பு முடிந்துவிடும் என்றும் அதன் பின்னர் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் தொடங்கி வரும் டிசம்பரில் படத்தை வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் வரும் தீபாவளியன்று படத்தின் டீசர் அல்லது டிரெய்லரை வெளியிட வாய்ப்பிருப்பதாகவும், தீபாவளிக்கு பின் புரமோஷன் பணிகளும் தொடங்கும் என்றும் கூறப்படுகிறது. .

அருண்விஜய், ப்ரியா பவானிசங்கர், யோகிபாபு, பிரகாஷ்ராஜ், ராதிகா, அம்மு அபிராமி உள்பட பலர் இந்த படத்தில் நடித்து வருகின்றனர். ஜிவி பிரகாஷ் இசையில் டிரம்ஸ்டிக் புரொடக்ஷன் நிறுவனத்தின் தயாரிப்பில் இந்த படம் உருவாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Related Videos