இரண்டாம் பாகமாகும் அருண்விஜய்யின் ஹிட் படம்!

நடிகர் அருண் விஜய் நடித்த ஹிட் படத்தின் இரண்டாம் பாகம் விரைவில் உருவாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

அருண் விஜய் நடிப்பில் கார்த்திக் நரேன் இயக்கத்தில் உருவான ’மாஃபியா’ என்ற திரைப்படம் கடந்த 2020 ஆம் ஆண்டு வெளியானது. பிரியா பவானிசங்கர் நாயகியாக நடித்திருந்த இந்தப் படம் அதிரடி ஆக்ஷன் படமாக ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சமீபத்தில் நடிகர் அருண் விஜய் தனது சமூக வலைதளப் பக்கத்தில் ’மாஃபியா’ படத்தின் போட்டோஷுட் புகைப்படங்களை வெளியிட்டு தனது மலரும் நினைவுகளை பகிர்ந்தார். இந்த புகைப்படத்திற்கு பதிலளித்த இயக்குனர் கார்த்திக் நரேன் விரைவில் இந்த படத்தின் இரண்டாம் பாகத்தில் சந்திப்போம் என்று கூறியுள்ளார்.

ஏற்கனவே நடிகர் அருண் விஜய் கடந்த சில மாதங்களுக்கு முன் ’மாஃபியா’ படத்தின் இரண்டாம் பாகம் உருவாகும் என்றும், அதுகுறித்த பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும் தெரிவித்திருந்தார். ’மாஃபியா’ படத்தின் இரண்டாம் பாகம் உருவானால் அதில் பிரியா பவானி சங்கர் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் கார்த்திக் நரேன் தற்போது ‘நிறங்கள் மூன்று’ என்ற படத்தை இயக்கி உள்ளார் என்பதும் இந்தப் படம் விரைவில் வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

More News

மனைவியை அறையில் பூட்டி சுற்றி சுவர் கட்டிய சைக்கோ கணவன் கைது!

ஆந்திராவைச் சேர்ந்த சைக்கோ கணவர் ஒருவர் தனது மனைவி மற்றும் மகளை வீட்டில் பூட்டி வைத்து, அறையை சுற்றி சுவர் கட்டிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது .

கமல்ஹாசனின் அடுத்த படத்தின் கதை: 'விக்ரம்' ஆடியோ விழாவில் பா ரஞ்சித்

உலகநாயகன் கமல்ஹாசன் நடித்த 'விக்ரம்' திரைப்படத்தின் ஆடியோ விழா இன்று நடைபெற்ற நிலையில் இந்த விழாவில் கலந்து கொண்ட இயக்குனர் பா ரஞ்சித் கமல்ஹாசனின் அடுத்த படத்தின் கதை என்ன என்பதை கூறியுள்ளார்

யாரு விடியலை பாக்க போறாங்கன்னு முடிவு பண்றது நான்: 'விக்ரம்' டிரைலர்

 உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகிய 'விக்ரம்' படத்தின் டிரைலர் சற்று முன் வெளியாகி இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

'விக்ரம்' படத்தில் நானும் இருக்கின்றேன்: 1986 'விக்ரம்' படத்தின் லிசி பேட்டி!

உலகநாயகன் கமல்ஹாசன் நடித்த 'விக்ரம்' திரைப்படம் வரும் ஜூன் மூன்றாம் தேதி வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா இன்று நடைபெற உள்ளது

திருமணத்திற்கு பின்னரும் கள்ளத்தொடர்பு வைத்திருந்தேன்: பிரபல நடிகை பேட்டி

திருமணத்திற்கு பின்னர் இன்னொருவருடன் கள்ள தொடர்பு வைத்திருந்தேன் என்றும் எனது கணவரும் இன்னொரு பெண்ணுடன் கள்ளத் தொடர்பு வைத்திருந்தார்