'வாடி என் ராஜகுமாரி': அருண்விஜய்யின் 'யானை' படத்தின் பாடல் ரிலீஸ்!

  • IndiaGlitz, [Thursday,January 13 2022]

அருண் விஜய் நடிப்பில், ஹரி இயக்கத்தில் உருவாகியுள்ள ‘யானை’ படத்தின் படப்பிடிப்பு முடிந்த நிலையில் இந்த படத்தில் இடம்பெற்ற சிங்கிள் பாடல் இன்று வெளியாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்ட நிலையில் சற்று முன் இந்த பாடல் வெளியாகி இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

அருண்விஜய், பிரியா பவானி சங்கர் நடிப்பில் உருவான திரைப்படம் ‘யானை’. இந்த படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படம் வரும் பிப்ரவரி அல்லது மார்ச் மாதம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் இந்த படத்தின் புரமோஷன் பணிகள் ஏற்கனவே தொடங்கி விட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் ‘யானை’ படத்தில் இடம்பெற்ற ’வாடி என் ராஜகுமாரி’ என்ற பாடல் சற்றுமுன் வெளியாகியுள்ளது. ஆர்யா தயால் குரலில் சினேகன் பாடல் வரிகளில் ஜிவி பிரகாஷ் இசை அமைப்பில் உருவான இந்த பாடல் தற்போது யூடியூபில் வெளியாகி வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

ஹரி இயக்கத்தில் டிரம்ஸ்டிக் புரடொக்சன்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவான இந்தப் படத்தில் அருண்விஜய், பிரியா பவானி சங்கர், சமுத்திரக்கனி, யோகிபாபு, ராதிகா, ஆடுகளம் ஜெயபாலன், இமான் அண்ணாச்சி, ராஜேஷ், போஸ் வெங்கட், சஞ்சீவ் உள்பட பலர் நடித்துள்ளனர். கோபிநாத் ஒளிப்பதிவில், அந்தோணி படத்தொகுப்பில் உருவாகியுள்ள இந்த படம், இந்த ஆண்டின் எதிர்பார்ப்புக்குரிய படங்களில் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.

More News

சமந்தா சந்தித்த அதே பிரச்சனையை எதிர்கொள்ளும் ரெஜினா!

சமீபத்தில் வெளியான 'புஷ்பா' திரைப்படத்தில் இடம்பெற்ற 'ஊ சொல்றியா மாமா, ஊஊ சொல்றியா மாமா' என்ற ஐட்டம் பாடலுக்கு சமந்தா டான்ஸ் ஆடிய நிலையில் அவருக்கு ஏற்பட்ட அதே பிரச்சனை 'ஆச்சார்யா'

பிரதமர் மோடியின் அறிவிப்புக்கு வரவேற்பு தெரிவித்த நடிகை ஓவியா!

பிரதமர் மோடியின் சமீபத்திய அறிவிப்பு ஒன்றுக்கு நடிகை ஓவியா தனது டுவிட்டர் பக்கத்தில் வரவேற்பு தெரிவித்துள்ளார். 

பிரபல டென்னிஸ் வீரர் நோவக் ஜோகோவிச்சுக்கு 5 ஆண்டு சிறையா? கலக்கத்தில் ரசிகர்கள்!

செர்பியா நாட்டைச் சேர்ந்த உலகின் நம்பர் ஒன் டென்னிஸ் வீரர் ஜோகோவிச் ஆஸ்திரேலியா நாட்டின் விசா தொடர்பான சர்ச்சையில்

2022 ஐபிஎல் எங்கே நடக்கும்? அமீரகத்தை ஓரம்கட்டி பிசிசிஐ எடுத்த அதிரடி முடிவு!

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இந்த ஆண்டும் ஐபிஎல் போட்டிகள்

மீண்டும் தான் யாரென நிரூபித்த கோலி… கேப்டவுனில் நடந்த பரபரப்பு சம்பவங்கள்!

தென்ஆப்பிரிக்காவிற்கு எதிரான 3 ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில்