சூர்யாவின் அடுத்த படத்தில் அருண்விஜய்! பரபரப்பு தகவல்

  • IndiaGlitz, [Tuesday,January 26 2021]

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகர்களின் பட்டியலை நோக்கி சென்று கொண்டிருக்கும் நடிகர்களில் ஒருவர் அருண்விஜய். இவர் தொடர்ச்சியாக வெற்றி படங்களை கொடுத்துக் கொண்டிருக்கும் நிலையில் தற்போது கைவசம் 4 படங்களை வைத்து உள்ளார் என்பதும் அந்த படங்களின் படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் சமீபத்தில் சூர்யாவின் 2டி நிறுவனத்தின் சார்பில் தயாரிக்கப்படும் ஒரு திரைப்படத்தில் அருண் விஜய்யின் மகன் அர்னவ் முக்கிய வேடத்தில் நடிப்பதாக தகவல்கள் வெளிவந்தன. இந்த படத்தின் படப்பிடிப்பு ஊட்டியில் நடைபெற்று வருவதாகவும் இந்த படத்தை சரவ் சண்முகம் என்பவர் இயக்கி வருவதாகவும் தகவல்கள் வெளிவந்தன

இந்த நிலையில் சமீபத்தில் அருண் விஜய், தனது மகன் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு நடக்கும் ஊட்டிக்கு சென்றார் என்ற தகவல் வெளிவந்தது. மகனுக்கு துணையாக தான் அருண்விஜய் சென்றார் என்று கூறப்பட்ட நிலையில் தற்போது அருண்விஜய்யும் அந்த படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கிறார் என்றும் அதாவது அர்னவுக்கு தந்தையாகவே அருண்விஜய் நடிப்பதாகவும் இந்த படத்திற்காக அவர் 15 நாட்கள் கால்ஷீட் கொடுத்துள்ளதாகவும் தற்போது தகவல்கள் வெளிவந்துள்ளன

சூர்யாவின் படத்தில் அருண்விஜய் இணைந்துள்ள தகவல் தற்போது கோலிவுட் துறைகளில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

More News

விஜய் தேவரகொண்டா மடியில் உட்கார்ந்திருக்கும் கம்பீரமான நாய்: வைரல் புகைப்படம்!

அர்ஜுன் ரெட்டி என்ற திரைப்படத்தின் மூலம் தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக மாறிய நடிகர் விஜய் தேவரகொண்டா, தமிழில் 'நடிகையர் திலகம், 'நோட்டா' போன்ற படங்களிலும் நடித்துள்ளார்.

அனிதாவுக்கு ஸ்ட்ராங், சனம்ஷெட்டிக்கு லைட்: வைரலாகும் புகைப்படம்!

105 நாட்களாக நடைபெற்ற பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி சமீபத்தில் முடிவடைந்தது என்பதும் இந்த நிகழ்ச்சியில் ஆரி மற்றும் பாலாஜி வின்னர் மற்றும் ரன்னராக வெற்றி பெற்றனர் என்பதும் தெரிந்ததே 

ரிலீசுக்கு முன்னரே வைரலாகும் தனுஷின் 'கர்ணன்' பட விமர்சனம்!

தனுஷ் நடிப்பில் இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கிய 'கர்ணன்' திரைப்படத்தின் படப்பிடிப்பு மற்றும் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் சமீபத்தில் முடிவடைந்த நிலையில் இந்த படத்தின் ரிலீஸ் தேதி விரைவில்

தனது படத்தின் நாயகியை திருமணம் செய்யும் 'கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்' இயக்குனர்

இயக்குனர் தேசிங்கு பெரியசாமி இயக்கிய 'கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்' என்ற திரைப்படம் கடந்த ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பதும்

கிராமப்புற ஏழை விவசாயிகள் மற்றும் கூலி தொழிலாளர்கள்களுக்கு  இலவச கான்கீரீட் வீடுகள்: முதல்வரின் திட்டத்தால் விவசாயிகள் மகிழ்ச்சி!

விவசாயிகள் மற்றும் விவசாய கூலி தொழிலாளர்களுக்கும் கான்கிரீட் வீடுகள் கட்டி தரப்படும் என்று முதலமைசர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.