close
Choose your channels

மீண்டும் ஒரு க்ரைம் கதையில் அருண்விஜய்

Sunday, March 3, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

அருண்விஜய் நடித்த 'தடம்' திரைப்படம் கடந்த வெள்ளியன்று வெளியாகி ஊடகங்கள் மற்றும் ரசிகர்களின் பேராதரவை பெற்று திரையரங்குகளில் ஓடி வருகின்றது. இந்த படம் அருண்விஜய்க்கு ஒரு திருப்பமாகவே பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் அருண்விஜய்யின் அடுத்தபடமான 'அருண்விஜய் 28' திரைப்படத்தின் தகவல் தற்போது வெளிவந்துள்ளது. இந்த படமும் ஒரு க்ரைம் கதையம்சம் கொண்ட படம் என்பதும் 'குற்றம் 23' படத்தை அடுத்து மீண்டும் இந்த படத்தில் அவர் போலீஸ் அதிகாரியாக நடிக்கவுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த படத்தை ஆர்.கண்ணன் மற்றும் மிலந்த் ஆகியோர்களிடம் உதவி இயக்குனராக இருந்த கோபிநாத் நாராயணமூர்த்தி என்பவர் இயக்கவுள்ளார். இந்த படத்தில் நடிக்கும் மற்ற நட்சத்திரங்களின் தேர்வு நடைபெற்று வருவதாகவும், இந்த படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு மிக விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.