அருண்விஜய்யுடன் மீண்டும் கூட்டணி சேரும் பிரபல இயக்குனர்

  • IndiaGlitz, [Tuesday,March 14 2017]

சமீபத்தில் வெளியான அருண்விஜய்யின் 'குற்றம் 23' என்ற மெடிக்கல் க்ரைம் திரைப்படம் தமிழகம் முழுவதும் மாபெரும் வெற்றியை பெற்றுள்ளது. இந்த ஆண்டின் முதல் சூப்பர் ஹிட் படம் என்ற பெருமையை பெற்றுள்ள இந்த படம் அருண்விஜய்யின் திரையுலக வாழ்வில் பெரும் திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஒரே ஒரு சூப்பர் ஹிட் வெற்றிக்காக பலவருடங்கள் காத்திருந்த அருண்விஜய்க்கு அவர் எதிர்பார்த்த வெற்றி கிடைத்துவிட்டதால் இனி அவர் இந்த வெற்றியை தக்க வைத்து கொள்ள அதிகமாக போராட வேண்டிய நிலை உள்ளது.
இந்நிலையில் அருண்விஜய்யின் சிறந்த படங்களில் ஒன்றாகிய 'தடையற தாக்க' படத்தை இயக்கிய இயக்குனர் மகிழ்திருமேனியுடன் இணைந்து ஒரு படத்தில் அவர் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. மகிழ்திருமேனி கடைசியாக ஆர்யா நடித்த 'மீகாமன்' என்ற படத்தை இயக்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது
அருண்விஜய்-மகிழ்திருமேனி இணையும் இந்த படம் குறித்த தகவல்கள் மிகவிரைவில் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More News

ஆளுங்கட்சி ஊடகங்களில் முதல்வர் பெயர் இருட்டடிப்பா?

பொதுவாக ஆளுங்கட்சி ஊடகம் என்றாலே அரசுக்கு ஜால்ரா போடும் வகையிலும், முதல்வரின் பெருமைகளை பறைசாற்றும் விதமாகத்தான் இருக்கும்.

இதுக்கு கூட லஞ்சமா? இந்த தலைமை ஆசிரியையை என்ன செய்யலாம்?

மாதா, பிதா, குரு தெய்வம் என தாய் தந்தையர்களுக்கு பிறகு தெய்வமாக மதிப்பளிக்கப்படுபவர்கள் ஆசிரியர்கள்.

நான் சொல்லாத விஷயத்தை எழுதி வரும் உப்புமா இணையதளங்கள். நடிகை கஸ்தூரி ஆவேசம்

சமீபத்தில் நடிகை கஸ்தூரி கூறியதாக ஒருசில இணையதளங்களில் சர்ச்சைக்குரிய செய்தி ஒன்று மிக வேகமாக பரவி வந்தது. சுசித்ரா டுவிட்டர் பிரச்சனைக்கு இணையாக இந்த செய்தி மிக வேகமாக பரவி வந்த நிலையில் இந்த செய்தி குறித்து நடிகை கஸ்தூரி விளக்கம் அளித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள வீடியோ பேட்டி ஒன்றில் கூறியிருப்பதாவது...

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல். வெற்றிக்கனியை ருசிப்பது யார்?

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வெற்றி பெற்ற தொகுதியான ஆர்.கே.நகர் தொகுதியில் வரும் ஏப்ரல் 12ஆம் தேதி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. ஜெயலலிதா மறைவிற்கு பின்னர் இரு அணிகளாக பிரிந்துள்ள சசிகலா மற்றும் ஓபிஎஸ் அணியினர் தங்களுக்கு மக்கள் செல்வாக்கு இருக்கின்றது என்பதை நிரூபிக்க கிடைத்த வாய்ப்பாக இந்த இடைத்தேர்தல் கருதப்படுக&

கமல்ஹாசனை அடுத்து கருணாநிதியை வம்புக்கு இழுத்த சுப்பிரமணியன் சுவாமி

கடந்த சில நாட்களாக கமல்ஹாசனுடன் டுவிட்டர் போர் செய்து கொண்டிருந்த பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி தற்போது கருணாநிதி, கச்சத்தீவை தாரை வார்க்க அப்போதைய பிரதமர் இந்திராகாந்தியிடம் பணம் பெற்றதாக திடுக்கிடும் புகார் ஒன்றை கூறியுள்ளார்...