close
Choose your channels

அருண்விஜய்யின் அடுத்த த்ரில் படத்தின் இயக்குனர்!

Saturday, September 7, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

இந்த ஆண்டு அருண்விஜய் நடித்த ‘தடம்’ திரைப்படம் மிகப்பெரிய வெற்றி அடைந்த நிலையில் அவர் தற்போது ‘அக்னி சிறகுகள்’, ‘பாக்ஸர்’ மற்றும் ‘மாஃபியா’ ஆகிய திரைப்படங்களில் நடித்து வருகிறார். இதில் ‘மாஃபியா’ திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து விரைவில் ரிலீசுக்கு தயாராகவுள்ளது.

இந்த நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன் அருண்விஜய் தனது டுவிட்டரில் தனது அடுத்த படம் முடிவாகிவிட்டதாகவும் விரைவில் இதுகுறித்த அறிவிப்பை வெளியிடவிருப்பதாகவும் தெரிவித்தார். அதன்படி தற்போது இயக்குனர் ஜி.என்.ஆர். குமாரவேலன் இயக்கும் த்ரில் படத்தில் நடிக்க அருண்விஜய் ஒப்பந்தம் செய்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இவர் ஏற்கனவே ‘நினைத்தாலே இனிக்கும்’, யுவன் யுவதி’ ‘ஹரிதாஸ்’ மற்றும் ‘வாகா’ ஆகிய திரைப்படங்களை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த படத்தில் அருண்விஜய் ‘குற்றம் 23’ படத்திற்கு பின் மீண்டும் போலீஸ் கேரக்டரில் நடிக்கின்றார். த்ரில் படமாக அமையவுள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு சென்னையில் இம்மாதம் தொடங்கவுள்ளது. கோபிநாத் ஒளிப்பதில் ஷபீர் இசையில் உருவாகவுள்ள இந்த படம் அருண்விஜய்யின் 30வது படம் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த படத்தில் தனது லுக் இதுவரை எந்த படத்திலும் இல்லாத வகையில் புதுவகையில் இருக்கும் என்றும் இந்த படத்தில் நடிக்க மிகவும் ஆர்வமாக இருப்பதாகவும் அருண்விஜய் தெரிவித்துள்ளார். 
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.