அருண்விஜய்யின் அடுத்த படத்தின் அடுத்தகட்ட பணி ஆரம்பம்: விரைவில் ரிலீஸ்

  • IndiaGlitz, [Monday,August 03 2020]

இயக்குனர் ஜிஎன்ஆர் குமரவேலன் இயக்கத்தில் அருண்விஜய் நடித்து வரும் திரைப்படம் ’சினம்’. இந்த படத்தின் படப்பிடிப்பு லாக்டவுனுக்கு முன்பே முடிந்துவிட்ட நிலையில் கடந்த சில நாட்களாக இந்த படத்தின் போஸ்ட் புரடொக்சன்ஸ் பணிகள் நடைபெற்று வந்தது.

இந்த நிலையில் இன்று முதல் இந்த படத்தின் டப்பிங் பணி தொடங்கப்பட்டுள்ளது. இதற்கான பூஜையில் அருண்விஜய், விஜயகுமார், இயக்குனர் ஜிஎன்ஆர் குமரவேலன் உள்பட பலர் கலந்து கொண்டனர். பூஜைக்கு பின் அருண்விஜய் தனது பகுதிக்கான டப்பிங் பணியை தொடங்கினார். இதுகுறித்த புகைப்படங்களை அவர் தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளார் என்பதும் இந்த புகைப்படங்கள் வைரலாகி வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

சினம் படத்தில் அருண்விஜய்க்கு ஜோடியாக பல்லக் லால்வானி என்பவர் நடித்துள்ளார். அருண்விஜய் காவல்துறை அதிகாரியாக நடித்துள்ள இந்த படத்திற்கு ஷபீர் இசையமைத்துள்ளார். கோபிநாத் ஒளிப்பதிவில் உருவாகியுள்ள இந்த படத்தை கே.விஜயகுமார் தயாரித்துள்ளார். லாக்டவுன் முடிந்ததும் இந்த படம் வெளியாகும் என்று கூறப்படுகிறது.

More News

மும்மொழிக் கொள்கைக்கு முதல்வரின் எதிர்ப்பு வரவேற்கத்தக்கது, ஆனால்... கமல்ஹாசன் டுவீட்

மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கையில் இடம்பெற்ற மும்மொழிக் கொள்கை என்ற அம்சத்திற்கு தமிழகத்திலிருந்து பெரும் எதிர்ப்பு கிளம்பியது என்பது தெரிந்ததே.

கொரோனாவால் உயிரிழந்த நர்ஸ் உடலை புதைக்க எதிர்ப்பு: 2 மணி நேரமாக தவிக்கும் உறவினர்கள்

அரசு மருத்துவமனையில் பணிபுரிந்து வந்த நர்ஸ் ஒருவர் கொரோனாவால் உயிரிழந்த நிலையில் அவரது உடலை புதைக்க கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் உறவினர்கள் இரண்டு மணி நேரமாக

ஒரே நாளில் 2 எம்பிக்கள், ஒரு எம்.எல்.ஏவுக்கு கொரோனா: தமிழகத்தில் பரபரப்பு

தமிழகத்தில் ஏற்கனவே திமுக, அதிமுக மற்றும் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த எம்எல்ஏக்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தமிழ் சினிமாவின் இளம் ஹீரோவுக்கு பெண் குழந்தை: வைரலாகும் புகைப்படம்

தமிழ் சினிமாவின் இளம் ஹீரோக்களில் ஒருவரான நகுல் சமீபத்தில் தனது பிறந்த நாளன்று தனது மனைவி கர்ப்பமாக இருப்பதாக அறிவித்தார். விரைவில் தனது குடும்பத்தில் புது வரவை எதிர்பார்த்து காத்திருப்பதாகவும்

ஐபிஎல் டி20 போட்டிக்களில் நேரத்தை மாற்றி புது அறிவிப்பு!!!

ஐபிஎல் டி20 போட்டிகள் ஐக்கிய அரபு எமிரேட்டிஸில் வருகிற செப்டம்பர் 19 ஆம் தேதி தொடங்கி நவம்பர் 10 ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது என ஐபிஎல் நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டு இருக்கிறது.