அரவிந்தசாமி பிறந்த நாளில் 'இரட்டை விருந்து'

  • IndiaGlitz, [Saturday,June 17 2017]

'தனி ஒருவன்', 'போகன்' வெற்றி படங்களை அடுத்து நடிகர் அரவிந்தசாமி தற்போது 'சதுரங்க வேட்டை 2', 'வணங்காமுடி', 'பாஸ்கர் ஒரு ராஸ்கல், மற்றும் 'நரகாசுரன்' ஆகிய படங்களில் நடிக்க கமிட் ஆகியுள்ளார்.
இந்த நிலையில் அரவிந்தசாமியின் 47வது பிறந்த நாள் நாளை வருவதை அடுத்து 'வணங்காமுடி' படத்தின் ஃபர்ஸ்ட்லுக்கை ரிலீஸ் செய்ய படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர். இயக்குனர் செல்வா இயக்கத்தில் உருவாகி வரும் இந்த படத்தில் அரவிந்தசாமி, ரித்திகாசிங், நந்திதா ஸ்வேதா, சாந்தினி தமிழரசன், கணேஷ் வெங்கட்ராமன், சிம்ரன்,, தம்பிராமையா உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். டி.இமான் இசையமைக்கும் இந்த படத்திற்கு கோகுல் ஒளிப்பதிவும், அந்தோணி படத்தொகுப்பு பணியும் புரிகின்றனர்.
மேலும் நாளை அரவிந்தசாமி நடிக்கவுள்ள இன்னொரு படமான 'நரகாசுரன்' படத்தின் போஸ்டர் வெளியாகவுள்ளதாகவும், இந்த போஸ்டரில் 'நரகாசுரன்' படத்தில் நடிக்கும் நடிகர், நடிகைகள் மற்றும் டெக்னீஷியன்கள் குறித்த விபரங்கள் இருக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே நாளை அரவிந்தசாமியின் ரசிகர்களுக்கு இரட்டை விருந்து என்பது உறுதியாகியுள்ளது.

More News

கமல் 'சத்யா' போன்றே சிபிராஜ் 'சத்யா'வும் வித்தியாசமாக இருக்கும். சத்யராஜ்

சிபிராஜ் நடிப்பில் உருவாகியுள்ள சத்யா' திரைப்படம் விரைவில் வெளியாகவுள்ள நிலையில் நடிகரும் சிபிராஜின் தந்தையுமான சத்யராஜ் இந்த படம் குறித்து ஒரு வீடியோவை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார்.

பிரசாந்த் நடிக்கும் அடுத்த படத்திற்கு ரஜினி பட டைட்டில்

ஒரு காலத்தில் அஜித், விஜய்க்கு இணையாக கோலிவுட் திரையுலகில் தொடர்ச்சியான வெற்றி படங்களை கொடுத்த வந்த நடிகர் பிரசாந்த் கடந்த ஆண்டு வெளிவந்த 'சாகசம்' படத்தின் மூலம் ரீஎண்ட்ரி ஆனார். இந்த நிலையில் அவர் நடிக்கும் அடுத்த படம் குறித்த தகவல்கள் வெளிவந்துள்ளது...

'நெஞ்சம் மறப்பதில்லை' படத்தின் புதிய ரிலீஸ் தேதி

செல்வராகவன் இயக்கத்தில் எஸ்.ஜே.சூர்யா, ரெஜினா நடித்த த்ரில் படமான 'நெஞ்சம்  மறப்பதில்லை' திரைப்படம் வரும் ரம்ஜான் திருநாளான ஜூன் 23ஆம் தேதி வெளிவரும் என்று கூறப்பட்டது...

ரஜினி அரசியலுக்கு வர இந்த ஒரு தகுதி போதும்: நடிகர் செந்தில்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சமீபத்தில் தனது ரசிகர்களை சந்தித்தபோது அரசியல் குறித்து பேசிய பரபரப்பான பேச்சு தமிழக அரசியலில் பெரும் சுனாமியை ஏற்படுத்தியது...

வருடக்கணக்கில் யோசிக்கும் ரஜினியை வலிய போய் சந்தித்த கஸ்தூரி

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களை கலாய்த்தவர்கள், திட்டியவர்கள், விமர்சனம் செய்தவர்கள் கூட அவரை நேரில் பார்த்தால் அவரது அன்புக்கு சரண் அடைந்துவிடுவார்கள் என்பது அனைவரும் அறிந்ததே...