த்ரிஷாவுக்கு நன்றி, பாராட்டு தெரிவித்த அரவிந்தசாமி

  • IndiaGlitz, [Monday,March 27 2017]

நட்டி நட்ராஜ் நடித்த 'சதுரங்க வேட்டை' திரைப்படம் கிராமப் பகுதிகளில் நடக்கும் ஊழலை எடுத்துக் கூறும் படமாக இருந்த நிலையில் அந்த படத்தின் இரண்டாம் பாகமான 'சதுரங்க வேட்டை 2' திரைப்படம் நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி குற்றங்களை செய்வதை மையமாகக் கொண்டு உருவாகி வந்தது.
கடந்த சில மாதங்களாக 'சதுரங்க வேட்டை 2' படத்தின் படப்பிடிப்பை படக்குழுவினர் நடத்தி வந்த நிலையில் சில நாட்களுக்கு முன் மலேசியாவில் இறுதிக்கட்ட படப்பிடிப்பை தொடங்கினர். இந்நிலையில் இந்த படத்தில் தனது பகுதியின் படப்பிடிப்பு முடிந்துவிட்டதாகவும் த்ரிஷா உள்பட படக்குழுவினர் அனைவருக்கு நன்றி தெரிவித்துவிட்டு நாடு திரும்பியதாகவும் அரவிந்தசாமி தனது சமூக வலைத்தளத்தில் கூறியுள்ளார். மேலும் த்ரிஷாவுடன் பணிபுரிந்தது மறக்க முடியாத அனுபவம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
பிரபல இயக்குனர் மற்றும் நகைச்சுவை நடிகர் மனோபாலா தயாரித்து வரும் இந்த படத்தில் அரவிந்தசாமி, த்ரிஷா, பூர்ணா, நாசர், ராதாரவி, ஸ்ரீமான் உள்பட பலர் நடித்து வருகின்றனர். நிர்மல் குமார் இயக்கி வரும் இந்த படத்திற்கு வெங்கடேஷ் ஒளிப்பதிவும், ராஜா சேதுபதி படத்தொகுப்பு பணிகளையும் செய்து வருகின்றனர். இந்த படத்திற்கு அஸ்வின் வினாயகமூர்த்தி என்பவர் இசையமைத்து வருகிறார். இவரது இசையில் நடிகை ரம்யா நம்பீசன் ஒரு பாடலை பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

பிரபல அரசியல்வாதிக்கு லைகா நிறுவனம் அனுப்பியுள்ள வக்கீல் நோட்டீஸ்

பிரபல தயாரிப்பு நிறுவனமான லைகா புரடொக்ஷன்ஸ் நிறுவனம் இலங்கையில் ஏற்பாடு செய்திருந்த ஈழத்தமிழர்களுக்கு வீடு வழங்கும் விழாவில் கலந்து கொள்ள முதலில் ஒப்புக்கொண்டிருந்த ரஜினிகாந்த், பின்னர் தமிழக அரசியல்வாதிகள் சிலர் தெரிவித்த எதிர்ப்பு காரணமாக விழாவில் கலந்து கொள்ளும் திட்டத்தை ரத்து செய்தார்.

10 வருடங்களுக்கு பின் அஜித் பட இயக்குனரின் அடுத்த படம்

அஜித், அசின் நடிப்பில் கடந்த 2007ஆம் ஆண்டு வெளிவந்த படம் 'ஆழ்வார்'. இந்த படம் எதிர்பார்த்த வெற்றியை பெறாதால் இந்த படம் வெளிவந்து பத்து வருடங்கள் ஆகிவிட்ட நிலையிலும் இந்த படத்தின் இயக்குனர் ஷெல்லாவிற்கு வேறு வாய்ப்புகள் கிடைக்காமல் இருந்தது. இடையில் இரண்டு படங்களை இவர் இயக்குவதாக இருந்து பின்னர் அவை கைவிடப்பட்டது...

ஆதார் அட்டை கட்டாயமா? சுப்ரீம் கோர்ட் அதிரடி உத்தரவு

இந்திய குடிமகன் அனைவருக்கும் ஆதார் அட்டை கட்டாயம் என்று அவ்வப்போது வெளிவரும் அரசின் உத்தரவுகள் உறுதி செய்து வருகிறது.

நயன்தாராவின் 'டோரா'வுக்கு 'A' சர்டிபிகேட். விக்னேஷ்சிவனின் வித்தியாசமான கமெண்ட்

லேடிசூப்பர் ஸ்டார் நயன்தாரா நடிப்பில் தாஸ் ராமசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள 'டோரா' என்ற திகில் திரைப்படம் வரும் 31ஆம் தேதி உலகம் முழுவதும் ரிலீஸ் ஆகவுள்ளது.