close
Choose your channels

ரஜினி, கமல், விஜய் அரசியலுக்கு வந்தால் யாருக்கு ஆதரவு? அரவிந்தசாமி

Saturday, January 11, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

ஒரு பெரிய நடிகர் புகழுடன் இருப்பதற்கும், அவர் நல்லாட்சி தருவார் என்பதற்கும் சம்பந்தம் இல்லை என்று நடிகர் அரவிந்த்சாமி கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஒரு பெரிய நடிகர் என்ற புகழை மட்டும் வைத்து அரசியலிலும் அவர் நல்ல ஆட்சியை கொடுத்துவிட முடியாது என்று கூற முடியாது. அவருக்கு நல்ல ஆட்சியை கொடுக்கும் அளவுக்கு நல்ல மனது மட்டும் இருந்தால் போதாது. அவர் நல்ல விஷயங்களை கற்று அறிந்திருக்க வேண்டும். ஒரு அரசை எப்படி நடத்த வேண்டும் என்பது குறித்து படித்திருக்க வேண்டும். ஒருபுதிய திட்டத்தை ஏற்படுத்தி அதை எப்படி செயல்படுத்த வேண்டும் என்ற அறிவும் அனுபவமும் இருக்க வேண்டும் என்றும் அரவிந்த்சாமி கூறியுள்ளார்

மேலும் ரஜினி கமல் விஜய் ஆகிய மூவரில் மூவருக்கும் அரசியலுக்கு வரும் எண்ணம் இருக்கிறது என்றும் இவர்களில் யாருக்கு உங்கள் ஆதரவு என்ற கேள்விக்கு பதிலளித்த அரவிந்தசாமி ’நான் ரஜினிகாந்தின் ரசிகனாக இருப்பதாலோ அல்லது கமல் ரசிகனாக இருப்பதாலோ அல்லது விஜய்யை எனக்கு பிடிக்கும் என்பதாலோ நான் ஓட்டு போட மாட்டேன். என்னை பொருத்தவரை அவர்கள் அரசியலுக்கு வந்தவுடன் அவர்கள் சொல்லும் விஷயங்கள், அவர்களுடன் இருக்கும் நபர்கள், அவர்கள் சொல்லும் விஷயங்களை அவர்களால் இந்த செயலை செய்ய முடியுமா என்பதை ஆராய்ந்து தான் நான் யாருக்கு ஆதரவு கொடுப்பது என்பதை முடிவு செய்வேன் என்று கூறியுள்ளார்

நடிகர் அரவிந்தசாமியின் இந்த கருத்து இனி அரசியலுக்கு வர இருக்கும் நடிகர்களுக்கு ஒரு நல்ல அறிவுரையாக இருக்கும் என்று கருதப்படுகிறது
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.