close
Choose your channels

திரைப்படம் ஆகிறது பொள்ளாச்சி விவகாரம்: ஐபிஎஸ் அதிகாரி கேரக்டரில் பிரபல நடிகர்

Wednesday, January 29, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தமிழகத்தையே உலுக்கிய பொள்ளாச்சி விவகாரம் குறித்த தமிழ்ப்படம் ஒன்று உருவாகி வருகிறது. இந்த படத்தில் நடிகர் அரவிந்தசாமி முக்கிய கேரக்டரில் நடித்து வருகிறார்.

நடிகர் அரவிந்தசாமி சமீபத்தில் ஏ.எல்.விஜய் இயக்கி வரும் ’தலைவி’ என்ற படத்தில் எம்ஜிஆர் கேரக்டரில் நடித்து முடித்துள்ளார். இதனை அடுத்து அவர் தற்போது தனது அடுத்த படமான இயக்குனர் செல்வா இயக்கத்தில் உருவாகி வரும் ‘வணங்காமுடி’ என்ற படத்தில் நடித்து வருகிறார்.

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் பொள்ளாச்சி விவகாரம் தமிழகத்தையே உலுக்கிய நிலையில் இந்த விவகாரம் குறித்த கதைதான் வணங்காமுடி திரைப்படம் என்று படக்குழுவினர் தரப்பில் இருந்து செய்திகள் வெளியாகியுள்ளது. அரவிந்த்சாமி இந்த படத்தில் ஐபிஎஸ் அதிகாரியாக நடித்து இருப்பதாகவும் இளம்பெண்களை ஏமாற்றி பாலியல் குற்றங்கள் செய்யும் இளைஞர்களை அவர் புத்திசாலித்தனமாக எப்படி பிடிக்கிறார் என்பதுதான் இந்த படத்தின் கதை என்றும் கூறப்படுகிறது

அரவிந்த்சாமி ஜோடியாக சிம்ரன் நடிக்கும் இந்த படத்தில் நந்திதா ஸ்வேதா போலீஸ் கேரக்டரில் நடித்து வருகிறார். மேலும் ஒரு முக்கிய கேரக்டரில் ரித்விகா சிங் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு தற்போது கொடைக்கானலில் நடைபெற்று வருவதாகவும் இந்த படத்தை வரும் தமிழ் புத்தாண்டு தினத்தில் வெளியிட திட்டமிட்டிருப்பதாகவும் படக்குழுவினர்களிடமிருந்து தகவல்கள் வெளிவந்துள்ளது
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.