close
Choose your channels

மீண்டும் இணையும் ஆர்யா-சக்தி செளந்திரராஜன்: 'டெடி 2' உருவாகிறதா?

Monday, June 28, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

ஆர்யா நடிப்பில் இயக்குனர் சக்தி சௌந்தர்ராஜன் இயக்கத்தில் உருவான ‘டெடி’ திரைப்படம் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் ஓடிடியில் வெளியானது என்பதும் இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் ஆர்யா மீண்டும் சக்தி சௌந்தர்ராஜன் இயக்கத்தில் ஒரு திரைப்படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருப்பதாக செய்திகள் வெளியானது. இதனை அடுத்து ‘டெடி’ திரைப்படத்தின் இரண்டாம் பாகமா இந்த படம்? என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் இருந்தது.

ஆனால் சமீபத்தில் பேட்டியில் நடிகர் ஆர்யா கூறியபோது, இயக்குனர் சக்தி செளந்திரராஜன் இயக்கத்தில் மீண்டும் தான் நடிக்கும் திரைப்படம் ‘டெடி’ படத்தின் இரண்டாம் பாகமாக இருக்காது என்றும் இது ஒரு புதிய திரைக்கதை என்றும் முழுக்க முழுக்க தமிழ் சினிமாவுக்கு புதிதாக இந்த கதை இருக்கும் என்றும் இந்த படம் ஆக்ஷன் திரில்லர் படமாக இருக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே நடிகர் ஆர்யா, இயக்குனர் சாந்தகுமார் இயக்கத்தில் ஒரு திரைப்படத்தில் நடிக்க உள்ளார் என்பதும், பா ரஞ்சித் இயக்கத்தில் அவர் நடித்து முடித்துள்ள ‘சார்பாட்டா பரம்பரை திரைப்படம் மிக விரைவில் வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.