close
Choose your channels

ரசிகர்களுக்கு ஆர்யா-சாயிஷா நாளை அறிவிக்கவிருக்கும் முக்கிய தகவல்!

Monday, December 9, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தமிழ் திரை உலகின் நட்சத்திர ஜோடிகளில் ஒன்றான ஆர்யா-சாயிஷா ஜோடி, முதல் முதலாக ஜோடியாக நடித்த திரைப்படம் ’டெடி’. இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்தது என்பதை ஏற்கனவே பார்த்தோம். இந்த நிலையில் இந்த படத்தின் முக்கிய தகவல் ஒன்றை நாளை அறிவிக்க இருப்பதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர்

ஆர்யா-சாயிஷா நடிப்பில் இயக்குனர் சக்தி சௌந்தர்ராஜன் இயக்கத்தில், டி. இமான் இசையில் உருவாகியிருக்கும் திரில்லர் திரைப்படம் ’டெடி’ படத்தின் படப்பிடிப்பு முடிவுக்கு வந்துள்ள நிலையில், இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் நாளை மாலை 6 மணிக்கு வெளியாக இருப்பதாக படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்

ஆர்யா, சாயிஷா, பிக்பாஸ் புகழ் சாக்சி அகர்வால், சதீஷ் உள்பட பலர் நடித்து வரும் இந்த படத்தை ஸ்டுடியோக்ரீன் நிறுவனம் தயாரித்து வருகிறது. இந்த படத்தின் போஸ்ட் புரடொக்சன்ஸ் பணிகள் விரைவில் ஆரம்பிக்கப்படவிருப்பதாகவும் இந்த படம் வரும் பிப்ரவரியில் வெளியாக வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.