ரசிகர்களுக்கு ஆர்யா-சாயிஷா நாளை அறிவிக்கவிருக்கும் முக்கிய தகவல்!

  • IndiaGlitz, [Monday,December 09 2019]

தமிழ் திரை உலகின் நட்சத்திர ஜோடிகளில் ஒன்றான ஆர்யா-சாயிஷா ஜோடி, முதல் முதலாக ஜோடியாக நடித்த திரைப்படம் ’டெடி’. இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்தது என்பதை ஏற்கனவே பார்த்தோம். இந்த நிலையில் இந்த படத்தின் முக்கிய தகவல் ஒன்றை நாளை அறிவிக்க இருப்பதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர்

ஆர்யா-சாயிஷா நடிப்பில் இயக்குனர் சக்தி சௌந்தர்ராஜன் இயக்கத்தில், டி. இமான் இசையில் உருவாகியிருக்கும் திரில்லர் திரைப்படம் ’டெடி’ படத்தின் படப்பிடிப்பு முடிவுக்கு வந்துள்ள நிலையில், இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் நாளை மாலை 6 மணிக்கு வெளியாக இருப்பதாக படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்

ஆர்யா, சாயிஷா, பிக்பாஸ் புகழ் சாக்சி அகர்வால், சதீஷ் உள்பட பலர் நடித்து வரும் இந்த படத்தை ஸ்டுடியோக்ரீன் நிறுவனம் தயாரித்து வருகிறது. இந்த படத்தின் போஸ்ட் புரடொக்சன்ஸ் பணிகள் விரைவில் ஆரம்பிக்கப்படவிருப்பதாகவும் இந்த படம் வரும் பிப்ரவரியில் வெளியாக வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது

More News

குளிப்பதை வீடியோ எடுத்து 17 வயது சிறுமியை சீரழித்த 30 வயது பெண்!

பெண்களுக்கு ஆண்களால்தான் பாலியல் பலாத்கார அபாயம் ஏற்படுகிறது என்றால், பெண்களுக்கு பெண்களே பாலியல் பலாத்கார மிரட்டல் விடுத்த சம்பவம் கேரளாவில் நடைபெற்று உள்ளது அனைவரையும் அதிர்ச்சி அளித்துள்ளது

கீர்த்திசுரேஷை அடுத்து 'தலைவர் 168' படத்தில் இணைந்த பிரபல நடிகர்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில், சன் பிக்சர்ஸ் தயாரிப்பில், டி இமான் இசையமைப்பில் தயாராக உள்ள 'தலைவர் 168' படத்தின் அறிவிப்பு

முதன் முறையாக தாயின் குரலைக் கேட்கும் குழந்தை..!வீடியோ.

செவித்திறன் இல்லாமல் பிறந்த குழந்தை ஒன்றுக்கு ஹியரிங் எய்ட் இயந்திரம் பொருத்தப்பட்டவுடன் தாயின் குரலைக் கேட்டு அந்தக் குழந்தை காட்டும் ரியாக்‌ஷன் அடங்கிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது

உலகிலேயே இளமையான பிரதமர்..!

பின்லாந்து நாட்டின் பிரதமராக 34 வயதான சன்னா மரின் என்பவர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

மாரடைப்பால் இறந்து 6 மணி நேரத்திற்கு பின்னர் உயிர்த்தெழுந்த பெண்..!

ஸ்பெயினைச் சேர்ந்த பெண் ஒருவர் தனது கணவருடன் மலையேற்றத்தில் ஈடுபட்ட போது அதீத பனியால் மாரடைப்பு ஏற்பட்டு அதே இடத்திலேயே மூர்ச்சையானார்