ஆர்யாவின் 'டெடி' ஓடிடியில் ரிலீஸா?

  • IndiaGlitz, [Saturday,July 11 2020]

கொரோனா வைரஸ் காரணமாக கடந்த நான்கு மாதங்களாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள காரணத்தினால் சினிமா படப்பிடிப்புகள் நிறுத்தப்பட்டு உள்ளது என்பதும் திரையரங்குகள் மூடப்பட்டுள்ளதால் புதிய திரைப்படங்கள் வெளியாகவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் நாடு முழுவதும் ரிலீசுக்கு தயாராக இருந்த பல திரைப்படங்கள் தற்போது ஓடிடியில் ரிலீஸ் ஆகி வருகின்றன. குறிப்பாக தமிழில் ஜோதிகாவின் ’பொன்மகள் வந்தாள்’, கீர்த்தி சுரேஷின் ஆகிய பெண்குயின் ஆகிய திரைப்படங்கள் சமீபத்தில் ஓடிடியில் ரிலீசானது என்பதும் யோகிபாபு ஹீரோவாக நடித்த ‘காக்டெயில் உள்பட இன்னும் சில திரைப்படங்களும் ஓடிடியில் ரிலீஸ் ஆக உள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் ஆர்யா மற்றும் அவரது மனைவி சாயிஷா இணைந்து நடித்த ’டெடி’ திரைப்படம் ரிலீசுக்கு தயாராக உள்ள நிலையில் இந்த படமும் ஓடிடியில் ரிலீஸ் ஆகப்போவதாக செய்திகள் வெளியாகி வந்தது. ஆனால் இந்த தகவலை ’டெடி’ படத்தின் இயக்குனர் சக்தி சௌந்தர்ராஜன் அவர்கள் மறுத்துள்ளார். ஓடிடி பிளாட்பாரத்தில் நாடு முழுவதும் பல திரைப்படங்கள் வெளியாகி வருகிறது என்பது உண்மையே. ஆனால் அதே நேரத்தில் எங்களுடைய ’டெடி’ திரைப்படம் திரையரங்குகளில் தான் முதலில் ரிலீஸாகும். கொரோனா நிலைமை சீரானவுடன் இந்த வருட இறுதியில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கண்டிப்பாக திரையரங்கில் ரிலீசாகும் முன்னால் ஓடிடியில் ’டெடி’ திரைப்படம் ரிலீஸ் ஆகாது என்று இயக்குனர் சக்தி சௌந்தர்ராஜன் உறுதிபடக் கூறியுள்ளார்

ஏற்கனவே விஜய்யின் ’மாஸ்டர்’ சூர்யாவின் ’சூரரைப்போற்று’ உள்பட ஒருசில திரைப்படங்களின் தயாரிப்பாளர்கள் மற்றும் இயக்குநர்கள் தங்களுடைய திரைப்படங்கள் முதலில் திரையரங்குகளில் தான் ரிலீஸ் ஆகும் என்று அறிவித்து உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது

More News

கைகால்களை கட்டிப்போட்டு நள்ளிரவில் திருமணம்: 15 வயது சிறுமிக்கு நடந்த கொடுமை

நள்ளிரவில் 15 வயது சிறுமியின் கை கால்களை கட்டிப்போட்டு அவரது பெற்றோர்கள் மற்றும் உறவினர்களே கட்டாய திருமணம் செய்து வைத்த சம்பவம் வேலூர் அருகே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

வாரன் பஃபெட்டை பின்னுக்கு தள்ளினார் முகேஷ் அம்பானி: 

உலக கோடீஸ்வரர் பட்டியலில் 9 வது இடத்தில் இருந்த ரிலையன்ஸ் நிறுவனத்தின் முகேஷ் அம்பானி 8வது இடத்தில் இருந்த வாரன் பஃபெட்டை பின்னுக்குத் தள்ளியுள்ளார்.

சிபிசிஐடியின் முக்கிய அறிக்கை: சாத்தான்குளம் வீடியோவை டெலிட் செய்த சுசித்ரா

கடந்த சில நாட்களுக்கு முன்னர் தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் பகுதியில் தந்தை மகன் காவல் நிலையத்தில் கொலை செய்யப்பட்ட விவகாரம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது என்பது தெரிந்ததே.

சாலையில் கிடந்த ரூ.25 லட்சம் மதிப்பு மதுபானங்கள் அள்ளிச்சென்ற மதுப்பிரியர்களால் பரபரப்பு

மதுபானங்களை ஏற்றிச் சென்ற லாரி ஒன்று திண்டுக்கல் அருகே விபத்துக்குள்ளாகி கவிழ்ந்ததை அடுத்து சிதறிக்கிடந்த மதுபாட்டில்களை அள்ளிச்சென்ற மதுப்பிரியர்களால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

நடுரோட்டில் கொள்ளை முயற்சி: கணவரை காப்பாற்றிய இளம்பெண்ணின் வீரம்!

பெங்களூரில் நடுரோட்டில் திடீரென கொள்ளையர்கள் வழிமறித்து கொள்ளையடிக்க முயன்றபோது கணவரை அவரது மனைவி வீரமுடன் காப்பாற்றிய சம்பவம் ஒன்று தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது