close
Choose your channels

பா.ரஞ்சித் படத்திற்காக பாடிபில்டராக மாறிய ஆர்யா! டைட்டில் குறித்த தகவல்

Wednesday, February 19, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கடந்த ஆண்டு மகாமுனி, காப்பான் ஆகிய படங்களில் நடித்த நடிகர் ஆர்யா தற்போது ’டெடி’ என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படம் விரைவில் ரிலீசாக உள்ளது.

இந்த நிலையில் ரஜினி நடித்த ’காலா’ ’கபாலி’ ஆகிய படங்களை இயக்கிய இயக்குனர் பா. ரஞ்சித் இயக்கும் அடுத்த படத்தில் ஆர்யா நடிக்க இருப்பதாக ஏற்கனவே வெளிவந்த செய்தியைப் பார்த்தோம். ஆர்யாவின் 30வது படமாக உருவாகவிருக்கும் இந்த படம், குத்துச் சண்டையை மையப்படுத்திய கதையம்சம் கொண்டது என்பதும் இந்த படத்திற்கு ‘சல்பேட்டா’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டது.

இந்த நிலையில் இந்த படத்திற்காக ஆர்யா பாடிபில்டராக மாறி மாறி உள்ளார். இதுகுறித்த புகைப்படத்தை ஆர்யா தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார். மேலும் இந்த படத்தின் கூடுதல் விபரங்கள் நாளை மாலை 5 மணிக்கு வெளியாகும் என்றும் ஆர்யா குறிப்பிட்டுள்ளார்.

மேலும் இந்த படம் குறித்து ஆர்யா தனது சமூக வலைதளத்தில் கூறியதாவது ’வலிமையாக இருப்பது மட்டும்தான் உங்களுக்கு உள்ள ஒரே வாய்ப்பு. நீங்கள் எவ்வளவு வலிமை கொண்டவர்கள் என்பது உங்களுக்கு ஒருபோதும் தெரியாது’ என்று குறிப்பிட்டுள்ளார். சந்தோஷ் நாராயணன் இசையில் உருவாகவிருக்கும் இந்தப் படத்தில் ஆர்யா ஜோடியாக துஷாரா என்பவர் நடிக்கவுள்ளார். மேலும் இந்த படத்தில் கலையரசன், ராமச்சந்திர ராஜூ உள்பட பலர் நடிக்கவுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.