'எனிமி' நண்பனுக்கு என்னுடைய நன்றி: ஆர்யா டுவிட்

  • IndiaGlitz, [Saturday,April 24 2021]

ஆர்யா மற்றும் விஷால் இணைந்து நடித்து வரும் ’எனிமி’ திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்த சில நாட்களாக நடைபெற்று வந்த நிலையில் ஆர்யா சம்பந்தப்பட்ட காட்சிகளின் படப்பிடிப்பு முடிந்து விட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

‘அரிமா நம்பி’ ’இருமுகன்’ உள்ளிட்ட படங்களை இயக்கிய ஆனந்த் சங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் ’எனிமி’ படத்தில் விஷால் நாயகனாகவும் ஆர்யா வில்லனாகவும் நடித்து வருகின்றனர். மேலும் இந்த படத்தில் மிருணாளினி, பிரகாஷ்ராஜ், மம்தா மோகன்தாஸ், கருணாகரன் உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். தமன் இசையில் உருவாகி வரும் இந்த படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு தற்போது மும்முரமாக நடைபெற்று வரும் நிலையில் ஆர்யா நடிக்கும் காட்சிகளுக்கான படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது.

இதுகுறித்து ஆர்யா தனது டுவிட்டர் பக்கத்தில் ’நல்ல படத்தை கொடுத்த எனது நண்பன் ’எனிமி’ விஷாலுக்கு நன்றி. இந்த படத்தின் படப்பிடிப்பு எனக்கு மறக்க முடியாத அனுபவமாக இருந்தது. எங்களை நம்பிய எங்கள் தயாரிப்பாளர், இயக்குனர், ஒளிப்பதிவாளர் மற்றும் படக்குழுவினர் அனைவருக்கும் நன்றி. இப்போது தமன் அவர்களின் இசைக்காக காத்திருக்கிறேன் என்று பதிவு செய்துள்ளார்.

அதேபோல் இயக்குனர் ஆனந்த் ஷங்கர் இதுகுறித்து கூறியபோது ’ஆர்யாவின் படப்பிடிப்பு வேலைகள் முடிந்து விட்டன. ஒவ்வொரு நொடியும் அவர் நடிப்பதை ரசித்தேன். இப்போது ஊரடங்கு என்பதால் வேகமாக வீட்டுக்கு செல்கிறேன்’ என்று கூறியுள்ளார்.
 

More News

ஏப்ரல் 26 முதல் திரையரங்குகள், ஜிம்கள், பார்கள் இயங்க அனுமதியில்லை: தமிழக அரசு அதிரடி அறிவிப்பு

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் அதிகரித்து வருவதை அடுத்து புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்படலாம் என்று ஏற்கனவே செய்தி வெளிவந்த நிலையில் சற்று முன் தமிழக அரசு வெளியிட்டுள்ள

இது போலி, யாரும் நம்பாதீங்க: பதறியபடி அறிவிப்பு வெளியிட்ட சிபிராஜ்!

நடிகர் சிபிராஜ் பெயரில் வெளிவந்த விளம்பரம் ஒன்று இணையதளங்களில் வைரலாகி வருவதை அடுத்து அந்த விளம்பரத்தை தான் கொடுக்கவில்லை என்றும் அது முழுக்க முழுக்க போலியான விளம்பரம் என்றும் சிபிராஜ்

ஜார்ஜியா படப்பிடிப்பு நிறைவு நாளில் ரசிகர்களுக்காக விஜய் செய்த விஷயம்!

தளபதி விஜய் நடிப்பில் இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் உருவாகி வரும் 'தளபதி 65' படத்தின் படப்பிடிப்பு கடந்த சில நாட்களாக ஜார்ஜியா நாட்டில் நடைபெற்று வருகிறது என்பதை ஏற்கனவே பார்த்தோம் 

ஆக்சிஜன் அவசர தேவையா? உதவி எண் அறிவித்த தமிழக அரசு!

தமிழகத்தில் தினமும் கொரோனா வைரசால் பத்தாயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு வரும் நிலையில் பாதிக்கப்பட்டவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டால் அவர்களுக்கு செலுத்துவதற்கு

அடுத்த மார்ச் 2022 லும் கொரோனா மிரட்டுமா? பதைக்க வைக்கும் மருத்துவரின் வீடியோ விளக்கம்!

இந்தியாவில் கடந்த ஆண்டு மார்ச் 24 ஆம் தேதி வெறும் 11 என்ற எண்ணிக்கையி&