ஆர்யா-சாயிஷாவுக்கு அறிவித்த மகிழ்ச்சியான செய்தி!

  • IndiaGlitz, [Monday,December 09 2019]

நடிகர் ஆர்யாவும் அவருடைய மனைவியும் பிரபல நடிகை சாயிஷாவும் ஜோடியாக முதன் முதலில் நடித்து வரும் திரைப்படம் ’டெடி’. இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்த நிலையில் தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவுக்கு வந்துள்ளதாக படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

மேலும் படப்பிடிப்பு முடிவடைந்ததை அடுத்து இதனை ஒரு விழாவாக கொண்டாடிய படக்குழுவினர் இது குறித்த புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பதிவு செய்துள்ளனர்.

இயக்குனர் சக்தி சௌந்தர்ராஜன் இயக்கத்தில் உருவாகி வரும் இந்தப் படத்தில் பிரபல இயக்குனர் மகிழ்திருமேனி ஒரு முக்கிய கேரக்டரில் நடித்துள்ளர் என்பது குறிப்பிடத்தக்கது..

ஆர்யா, சாயிஷா முதல்முறையாக ஜோடியாக நடித்த படத்தின் படப்பிடிப்பு முடிவுக்கு வந்ததை அடுத்து இந்த நட்சத்திர ஜோடி தங்கள் மகிழ்ச்சியினை வெளிப்படுத்தியுள்ளனர்.

ஆர்யா, சாயிஷா, பிக்பாஸ் புகழ் சாக்சி அகர்வால், சதீஷ் உள்பட பலர் நடித்து வரும் இந்த படத்தை ஸ்டுடியோக்ரீன் நிறுவனம் தயாரித்து வருகிறது. டி.இமான் இசையமைப்பில் உருவாகியுள்ள இந்த படத்தின் பெரும்பாலான படப்பிடிப்பு வெளிநாட்டில் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

More News

2021ம் ஆண்டு தேர்தலிலும் ரஜினி இதையேதான் கூறுவார்: அமைச்சர் ஜெயக்குமார்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் உலக நாயகன் கமல்ஹாசன் ஆகிய இருவரும் கடந்த 40 ஆண்டுகளாக நண்பர்களாக இருந்தாலும், திரையுலகிலும் சரி அரசியலிலும் சரி இரு துருவங்களாக உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது

தமிழக நலனுக்காக டேட்டிங் செய்ய போகிறேன்: பிக்பாஸ் நடிகை அறிவிப்பு

தமிழகத்தின் நலனுக்காக நடிகர் ஒருவருடன் டேட்டிங் செய்யப்போகிறேன் என பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நடிகை ஒருவர் தனது சமூக வலைதளப் பக்கத்தில் கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது 

'தர்பார்' பேச்சுக்கு வருத்தம் தெரிவித்த ராகவா லாரன்ஸ்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'தர்பார்' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் ராகவா லாரன்ஸ் பேசிய போது சிறுவயதில் கமல் போஸ்டர் மீது சாணி அடித்ததாக தெரிவித்திருந்தார்

தெலுங்கானா என்கவுண்டருக்கு அஜித் ரசிகர்களின் வாழ்த்து போஸ்டர்

சமீபத்தில் தெலுங்கானா மாநிலத்தில் பெண் மருத்துவர் ஒருவர் நான்கு கயவர்களால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு உயிரோடு எரித்துக் கொலை செய்யப்பட்டார்.

இரண்டே வருடத்தில் முடித்த சபதம்: ரஜினிகாந்த்தின் உணர்ச்சிகரமான பேச்சு

பைரவி படத்திற்கு பின்னர் நான் ஒரு சில படங்களில் ஹீரோ மற்றும் வில்லனாக தொடர்ந்து நடித்துக் கொண்டிருக்கும் போதே என்னை பட்டிதொட்டியெங்கும் சேர்த்த ஒரு படம்தான்