ஷாருக்கான் மகன் நிரபராதியா? தேசிய போதைப்பொருள் தடுப்புப் அமைப்பின் முக்கிய அறிவிப்பு

  • IndiaGlitz, [Friday,May 27 2022]

போதைப் பொருள் வழக்கில் சிக்கிய ஷாருக்கான் மகன் ஆர்யன் கான் நிரபராதி என போதை பொருள் தடுப்பு அமைப்பு சற்றுமுன் தெரிவித்துள்ளது.

பிரபல பாலிவுட் நடிகர் ஷாருக்கான் மகன் ஆர்யன் கான் மற்றும் அவரது நண்பர்கள் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் சொகுசு கப்பலில் போதைப்பொருள் பயன்படுத்தியதாக கைது செய்யப்பட்டனர். ஆர்யன்கான் ஒரு மாதம் சிறையில் இருந்து அதன் பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.

இந்த வழக்கின் விசாரணை கடந்த சில மாதங்களாக நடந்து வந்த நிலையில் தற்போது ஆர்யன்கான் நிரபராதி என்றும் அவரது பெயரை குற்றப்பத்திரிகையில் இருந்து தேசிய போதைப்பொருள் தடுப்பு அமைப்பு நீக்கியுள்ளது என்றும் தகவல் வெளிவந்துள்ளது. இதனை அடுத்து ஆர்யாகான் குற்றவாளி இல்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட ஆர்யன்கானிடம் இருந்து எந்தவித போதைப் பொருட்களும் பறிமுதல் செய்யப்படவில்லை என்றும் அவருடைய மொபைல் போனிலும் போதைப்பொருள் பரிமாற்றம் செய்ததற்கான எந்தவிதமான ஆதாரமும் இல்லை என்றும் போதைபொருள் தடுப்பு அமைப்பு கூறியுள்ளது.

இன்று தாக்கல் செய்யப்பட்டுள்ள குற்றப்பத்திரிகையில் போதை கடத்தல் தொடர்பான குற்றவாளிகள் பட்டியலில் ஆர்யன்கான் பெயர் இடம் பெறவில்லை என்பது ஷாருக்கான் குடும்பத்திற்கு மிகப்பெரிய நிம்மதியை அளித்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

More News

நடிகர் அவதாரம் எடுத்த பாஜக தலைவர் அண்ணாமலை: சம்பளம் எவ்வளவு தெரியுமா?

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை ஒரு கன்னட திரைப்படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்து இருப்பதாகவும் இந்த படத்தின் டீசர் இன்று வெளியாக இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

’தளபதி 66’ படத்தில் இணைந்த ‘பீஸ்ட்’ நடிகை: வைரல் புகைப்படங்கள்

தளபதி விஜய் நடித்து வரும் 66வது படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பதும் முதல் கட்ட படப்பிடிப்பு சமீபத்தில் முடிந்த நிலையில்

சும்மாவா சொன்னாங்க அல்டிமேட்டுன்னு: அஜித் குடும்பத்துடன் தயாநிதி அழகிரி 

சும்மாவா சொன்னாங்க அல்டிமேட்டுன்னு என அஜித் குடும்பத்துடன் எடுத்த புகைப்படத்தை தயாரிப்பாளர் தயாநிதி அழகிரி தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளார். 

பிரபல நடிகை தூக்கில் தொங்கி தற்கொலை: ஆண் நண்பரிடம் விசாரணை

பிரபல நடிகை ஒருவர் தனது வீட்டில் தூக்கில் தொங்கி தற்கொலை செய்துகொண்ட நிலையில் அவருடைய ஆண் நண்பரிடம் போலீசார் விசாரணை செய்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

துபாயை அடுத்து பிரியங்கா மோகன் சென்ற அடுத்த நாடு: வைரல் வீடியோக்கள்

இயக்குனர் நெல்சன், நடிகர் கவின், நடிகர் ரெடின் கிங்ஸ்லி ஆகியோர்களுடன் சமீபத்தில் நடிகை பிரியங்கா மோகன் துபாய் சென்றார் என்பதும், அங்கு அவர் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள்