close
Choose your channels

ஊரடங்கு அறிவிக்கப்பட்டும் 'வலிமை' தயாரிப்பாளரின் துணிச்சலான முடிவு!

Wednesday, January 5, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தமிழகத்தில் திங்கள் முதல் சனிக்கிழமை வரை இரவு நேர ஊரடங்கும், ஞாயிறு அன்று முழு நேர ஊரடங்கும் அறிவிக்கப்பட்டுள்ளது என்பதும் இதனால் திங்கள் முதல் சனிக்கிழமை வரை மூன்று காட்சிகள் மட்டுமே திரையரங்குகளில் திரையிடப்படும் என்றும் ஞாயிறு அன்று முழுமையாக திரையரங்குகள் மூடப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் ‘வலிமை’ உள்பட பெரிய பட்ஜெட் படங்களில் ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்படும் என்று எதிர்பார்த்த நிலையில் தற்போது வரை ‘வலிமை’ திரைப்படத்தின் ரிலீஸ் தேதியில் எந்தவிதமான மாற்றமும் இல்லை என படக்குழுவினர்களிடம் இருந்து தகவல் வெளியாகி உள்ளது.

இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் ‘வலிமை’ படத்தை ரிலீஸ் செய்ய அனைத்து திரையரங்கு உரிமையாளர்கள் மற்றும் விநியோகஸ்தர்கள் தயாராக இருப்பதாகவும் அதே போல் வெளிநாடுகளில் இந்த படத்தை ரிலீஸ் செய்ய திரையரங்கு உரிமையாளர்கள் மிகவும் ஆர்வத்துடன் இருப்பதாகவும் தயாரிப்பாளர் போனி கபூருக்கு தகவல் வந்ததையடுத்து தமிழக அரசின் ஊரடங்கு கட்டுப்பாட்டினை ஏற்றுக்கொண்டு இந்த படத்தை ரிலீஸ் செய்ய துணிச்சலான முடிவை அவர் எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

இப்போதுவரை ‘வலிமை’ திரைப்படத்தின் ரிலீஸ் தேதியில் எந்தவித மாற்றமும் இல்லை என்ற தகவல் திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.