பிடித்ததை செய்கிறார்: விஜய் அரசியல் வருகை குறித்து 'கில்லி' ஆஷிஷ் வித்யார்த்தி


Send us your feedback to audioarticles@vaarta.com


விஜய் நடித்த ‘கில்லி’ திரைப்படத்தில் அவருக்கு அப்பா கேரக்டரில் நடித்திருந்த ஆஷிஷ் வித்யார்த்தி சமீபத்தில் அளித்த பேட்டியில் விஜய்யின் அரசியல் வருகை குறித்து தனது கருத்தை தெரிவித்த்துள்ளார்.
விஜய் நடித்த ‘கில்லி’ திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. அந்த படம் சமீபத்தில் ரீரிலீஸானபோது 50 கோடி ரூபாய் வசூல் செய்து அனைவரையும் ஆச்சரியப்படுத்தியது.
இந்த படத்தில் விஜய், த்ரிஷா, பிரகாஷ்ராஜ்க்கு அடுத்து அனைவரையும் கவர்ந்த மற்றொரு கேரக்டர் என்றால் அது விஜய்யின் அப்பா கதாபாத்திரத்தில் நடித்த ஆஷிஷ் வித்யார்த்தி தான்
சமீபத்தில், ஊடகங்களுக்கு பேட்டியளித்த ஆஷிஷ் வித்யார்த்தி விஜய்யின் அரசியல் வருகை குறித்து கேட்ட கேள்விக்கு பதிலளிக்கையில்:
"நான் எதையும் யோசிக்காமல், எனக்கு பிடித்ததை செய்து வருகிறேன். விஜய்யும் அதையே செய்து வருகிறார். இது அரசியல் என்பதால்தான் நாம் இதைப் பற்றிக் கேள்வி எழுப்புகிறோம். வேறு ஏதாவது செய்திருந்தால், இவ்விதம் கேள்வி எழுந்திருக்காது. நாளை யாராவது யோகா சென்டர் திறக்கப்போவதாக சொன்னால் அதை நாம் கேள்வி கேட்க மாட்டோம். அதுபோலத்தான் விஜயும் தன் மனதுக்குப் பிடித்ததை செய்கிறார். அவரது எண்ணத்தை நாம் பாராட்ட வேண்டும்." என்று தெரிவித்தார்.
மேலும், ‘கில்லி’ படம் உருவாகிய போது, அதன் வெற்றியை இயக்குநர் தரணி முன்பே உணர்ந்ததாக கூறினார். "சமீபத்தில் தரணியை சந்தித்தபோது கூட இதைத்தான் அவர் கூறினார். என்னைப் பொறுத்தவரை, வெற்றி அல்லது தோல்வியைக் கடந்த ஒரு நடிகன், தனது காட்சிகளை எப்படி சிறப்பாக உருவாக்கலாம் என்பதில் கவனம் செலுத்த வேண்டும். ஒரு நடிகராக, என் உழைப்பை மட்டுமே நான் தர வேண்டும். அதற்காகத்தான் ‘கில்லி’ படத்தில் நடித்தேன்."
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments