close
Choose your channels

பா ரஞ்சித்தின் அடுத்த படத்தில் அசோக்செல்வன்: நாயகியாக பிரபல நடிகரின் மகள்!

Monday, August 15, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பா ரஞ்சித்தின் அடுத்த திரைப்படத்தில் பிரபல நடிகர் மற்றும் தயாரிப்பாளர் அருண்பாண்டியன் மகள் கீர்த்தி பாண்டியன் நாயகியாக நடிக்க இருப்பதாகவும் இந்த படத்தின் படப்பிடிப்பு இன்று தொடங்கியதாகவும் தகவல்கள் வெளியாகின.

தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குனர்களில் ஒருவரான பா ரஞ்சித் இயக்கிய ’நட்சத்திரம் நகர்கிறது’ என்ற படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து விரைவில் ரிலீசாக உள்ளது. மேலும் விக்ரம் நடிக்கும் திரைப்படத்தையும் பா ரஞ்சித் விரைவில் இயக்க உள்ளார்.

இந்த நிலையில் பா ரஞ்சித்தின் நீலம் புரொடக்சன் தயாரிப்பில் உருவாகிவரும் திரைப்படத்தின் பூஜை இன்று சென்னையில் நடைபெற்றது. இந்த படத்தில் அசோக் செல்வன், கீர்த்தி பாண்டியன் ஆகிய இருவரும் நாயகன், நாயகிகளாக நடிக்கின்றனர். மேலும் இந்த படத்தில் சாந்தனு பாக்கியராஜ், பிரித்திவிராஜ் பாண்டியராஜன், திவ்யா துரைசாமி உள்ளிட்ட பலர் நடிக்க உள்ளனர்.

அறிமுக இயக்குனர் ஜெய் என்பவர் இயக்கத்தில் உருவாகும் இந்த படத்திற்கு கோவிந்த் வசந்தா இசையமைக்க உள்ளார். இந்த படத்தின் தொடக்க விழா புகைப்படங்கள் இணையதளங்களில் வைரலாகி வருகின்றன.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.