close
Choose your channels

தனி இசைப்பாடல் குறித்து அதிரடி கருத்துத் தெரிவித்த “குக்வித் கோமாளி“ அஸ்வின்!

Wednesday, October 20, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சமீபகாலமாக தமிழ் சினிமா வட்டாரத்தில் தனி இசைப் பாடல்கள் வெற்றிப்பெற்று வருகின்றன. இந்நிலையில் தனி இசைப் பாடல்களில் தான் நடிப்பது குறித்து ஆரம்பத்தில் பலரும் கேலி செய்தார்கள். ஆனால் தற்போது தனி இசைப் பாடல்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது என்று குக்வித் கோமாளி பிரபலம் அஸ்வின் தெரிவித்துள்ளார்.

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான “குக் வித் கோமாளி“ நிகழ்ச்சியில் கலந்துகொண்டு ரசிகர்களின் மனதை கொள்ளைக் கொண்டவர் அஸ்வின்குமார். அதுவும் அஸ்வினுக்கு பெண் ரசிகர்களிடம் இருந்து அதிக வரவேற்பு கிடைத்து வந்தது. இதையடுத்து சினிமாவில் நடிப்பதற்காகவே நான் சென்னை வந்தேன். ஆனால் வாய்ப்புக்கள் கிடைக்காமல் தவித்து வருவதாகக் கூறியிருந்தார்.

இந்நிலையில் அஸ்வின் தனி இசைப் பாடல்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் சந்தோஷ் தயாநிதி இசையில் இவர் நடித்த “குட்டிப் பட்டாசு“ ஆல்பம் பாடல் 100 கோடி பார்வையாளர்களைப் பெற்றிருந்தது. தற்போது “யாத்தி யாத்தி“ எனும் தனி இசைப்பாடலில் நடித்துள்ளார். இந்தப்பாடலும் யூடியூபில் 40 லட்சம் பார்வையாளர்களை கடந்துள்ளது.

இதுகுறித்து கருத்துப் பகிர்ந்துகொண்ட அஸ்வின், ஆரம்பத்தில் தனி இசைப் பாடல் வீடியோவில் நடித்ததற்கு தன்னை பலரும் கேலி செய்தனர். ஆனால் தனி இசை பாடல்களுக்கு பெரும் வரவேற்பு கிடைத்திருக்கிறது. அதைப் பார்க்கும்போது பெரும் மகிழ்ச்சியாக இருக்கிறது எனக் கூறிய அவர் தனது வெற்றிக்கு நண்பர்கள் உதவியதாகவும் அதனால்தான் இந்த இடத்தில் இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

தற்போது ஒரு திரைப்படத்தில் நடித்துவரும் அஸ்வின் நல்ல கதை அமையும்வரை தொடர்ந்து தனி இசைப் பாடல்களில் நடிப்பேன் என்றும் கூறியிருக்கிறார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.