close
Choose your channels

உலகின் 10 பணக்காரர் பட்டியலில் இணைந்த இந்தியர்: குவியும் வாழ்த்துக்கள்

Monday, June 22, 2020 • தமிழ் Comments
Jio
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

உலக பணக்காரர்கள் பட்டியலில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரியஸ் நிறுவனத்தின் உரிமையாளர் முகேஷ் அம்பானி முதல் பத்து இடங்களுக்குள் இணைந்துள்ளது இந்தியாவிற்கே பெருமை தரக்கூடியதாக கருதப்படுகிறது.

இந்தியாவில் மட்டுமின்றி ஆசியா பணக்காரர்களில் முதலிடத்தில் இருந்த முகேஷ் அம்பானி கடந்த சில மாதங்களுக்கு முன்னர் கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சியடைந்ததால் சரிவை சந்தித்தார். இதனால் அவர் சமீபத்தில் ஆசியாவின் பணக்காரர்கள் பட்டியலில் முதலிடத்தில் இருந்து இரண்டாவது இடத்திற்கு தள்ளப்பட்டார். அதுமட்டுமின்றி இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகமாகி ஊரடங்கும் அமல்படுத்தப்பட்டதால் முகேஷ் அம்பானியின் அனைத்து நிறுவனங்களின் பங்குகளும் இறங்கியதால் பெரும் சரிவு ஏற்பட்டது.

இந்த நிலையில் முகேஷ் அம்பானி தனது டிஜிட்டல் நிறுவனமான ஜியோவின் 24.17% பங்குகளை ஃபேஸ்புக் உள்பட ஒருசில நிறுவனங்களுக்கு விற்றார். இதன் மூலம் அவருக்கு ரூ.1,15,693.95 கோடிகள் கிடைத்தன. இதனால் முகேஷ் அம்பானி சொத்து மதிப்பு கிடுகிடுவென உயர்ந்தது. அதேநேரத்தில் பங்கு சந்தைகயும் மீண்டெழுந்து அவரது நிறுவனங்களின் பங்கு மதிப்புகளும் உயர்ந்தன.. இதன் காரணமாக தற்போது முகேஷ் அம்பானி சொத்த மதிப்பு ரூ.4.9 லட்சம் கோடியாக உயர்ந்தது. இதனையடுத்து முகேஷ் அம்பானி தற்போது உலகப் பணக்காரர்கள் பட்டியலில் 9வது இடத்திற்கு முன்னேறியுள்ளார். இதனையடுத்து முகேஷ் அம்பானிக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.