close
Choose your channels

103 வயது பாட்டிக்கு சென்னையில் இருந்து வீடியோ காலில் இறுதிச்சடங்கு செய்த உதவி இயக்குனர்

Tuesday, March 31, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சென்னையில் உதவி இயக்குனராக பணிபுரிந்து கொண்டிருக்கும் ஒருவர் உசிலம்பட்டியில் மறைந்த தனது பாட்டிக்கு காணொளி மூலம் இறுதி சடங்கு செய்த சம்பவம் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

மதுரையை அடுத்த உசிலம்பட்டியை சேர்ந்த 103 வயது சிவனம்மாள் என்ற மூதாட்டி உடல்நல குறைவு காரணமாக உயிரிழந்தார். அவரது மூத்த மகனின் பேரன் கார்த்திக் என்பவர்தான் அவருக்கு இறுதிச் சடங்கு செய்ய வேண்டும். சென்னையில் உதவி இயக்குனராக பணிபுரிந்து வரும் கார்த்திக் ஊரடங்கு உத்தரவு காரணமாக உசிலம்பட்டிக்கு செல்ல முடியாத நிலையில் உள்ளார். தன்னை ஆசை ஆசையாய் வளர்த்த பாட்டியின் இறுதிச் சடங்கை சென்னையிலிருந்து காணொளி மூலம் செய்த சம்பவம் அனைவரின் நெஞ்சை உருக்கும் சம்பவமாக அமைந்துள்ளது

மேலும் உசிலம்பட்டி பகுதியில் 90 வயதுக்கு மேல் உள்ளவர்கள் இறந்தால் அதனை ஒரு திருவிழாவாகக் கொண்டாடி சடங்குகளை செய்து வழியனுப்பி வைப்பார்கள். ஆனால் தற்போது ஊரடங்கு உத்தரவு காரணமாக நெருங்கிய உறவினர்களை கூட அழைக்க முடியாமல் மூன்றே மணி நேரத்தில் மூதாட்டியின் இறுதிச் சடங்குகளை குடும்பத்தினர் மட்டுமே கலந்துகொண்டு முடித்தனர் என்று அவரது உறவினர்கள் சோகமாக தெரிவித்தனர்

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Related Videos