45,000 மைல் வேகத்தில் பூமியை நோக்கி பறந்துவந்த விண்கல்… நடந்தது என்ன?

  • IndiaGlitz, [Thursday,January 20 2022]

விண்வெளியில் ஆயிரக்கணக்கான சிறிய கோள்களும் விண்கற்களும் சுற்றிக்கொண்டே இருக்கின்றன. இதில் சில கோள்கள் மற்றும் விண்கற்கள் அவ்வபோது பூமியை நோக்கி வருவதும் இதனால் பூமிக்கு ஆபத்து வந்துவிடுமோ என நாம் அஞ்சுவதும் வாடிக்கையாக இருந்து வருகிறது. சில நேரங்களில் இந்த விண்கற்கள் பூமியை தாக்கி விடுவதும் உண்டு.

அந்த வகையில் இந்திய நேரப்படி நேற்று (19.01.2022) அதிகாலை 2.45 மணிக்கு பூமிக்கு மிக அருகில் ஒரு விண்கல் கடந்து சென்றது. இதுகுறித்து நாசா விஞ்ஞானிகள் ஜனவரி 12 ஆம் தேதி எச்சரித்து இருந்த நிலையில் அந்த விண்கல்லிற்கு 7482 எனப் பெரியட்டதோடு பூமிக்கு மிக அருகில் இந்த விண்கல் கடந்து செல்லும் எனவும் தெரிவித்து இருந்தனர். இந்நிலையில் நேற்று இந்த விண்கல் பூமிக்கு எந்த ஆபத்தையும் ஏற்படுத்தாமல் கடந்து சென்றிருக்கிறது.

570 நாட்களாக பயணம் செய்த இந்த விண்கல் பூமியை நோக்கி 45 ஆயிரம் மைல் வேகத்தில் வந்ததாகவும் 3,450 அடி உயரம் கொண்ட இது பூமிக்கு அருகில் 19.3 லட்சம் மைல் தொலைவில் கடந்த சென்றதாகவும் கூறப்படுகிறது. பூமியில் இருந்து இது சற்று தூரமாகக் கருதப்பட்டாலும் கடந்த 2019 ஆம் ஆண்டு 43 ஆயிரம் மைல் தொலைவில் ஒரு விண்கல் கடந்து சென்றதும் குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்த மாதத்தில் மட்டும் 5 விண்கற்கள் பூமியை நோக்கி வரும் எனவும் அது மிக நெருக்கமாக பூமியை கடந்து செல்லும் எனவும் நாசா விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.

More News

திரைப்படம் மூலம் விடுத்த கோரிக்கை: முதல்வரின் உத்தரவால் சமுத்திரகனி மகிழ்ச்சி!

திரைப்படம் மூலம் விடுத்த கோரிக்கையை தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் நிறைவேற்றி உத்தரவு பிறப்பித்துள்ளதற்கு நடிகரும் இயக்குனருமான சமுத்திரகனி தனது சமூக வலைதளப் பக்கத்தில் நன்றியை தெரிவித்துள்ளார். 

தனுஷ்-ஐஸ்வர்யா மீண்டும் இணைவார்கள்: ரசிகர்களின் நம்பிக்கைக்கு இதுதான் காரணமா?

தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா ஆகிய இருவரும் தாங்கள் பிரியப்போவதாக தங்களது சமூக வலைதளங்களில் தெரிவித்தாலும் இருவரும் மீண்டும் இணைய அதிக வாய்ப்பு இருப்பதாக ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

முளைப்பாரியுடன் கார்த்தி மகள்: இணையத்தை கலக்கும் புகைப்படம்

பிரபல நடிகர் கார்த்தியின் மகள் முளைப்பாரி உடன் இருக்கும் புகைப்படம் இணையத்தை கலக்கி வருவதையடுத்து ரசிகர்கள் அதனை வைரலாக்கி வருகின்றனர் 

'புட்டபொம்மா' பாடலை தூக்கி சாப்பிட வருது 'பீஸ்ட்' பாடல்: சொன்னது யார் தெரியுமா?

சமீப காலத்தில் வெளியான சூப்பர் ஹிட் பாடல்களில் ஒன்று 'புட்டபொம்மா' என்ற தெலுங்கு பாடல் என்பதும் அல்லு அர்ஜுன் மற்றும் பூஜா ஹெக்டே நடித்திருந்த 'அலா வைகுந்தபுரம்லூ' என்ற திரைப்படத்தில்

சிரஞ்சீவிக்கு 'நோ', மகேஷ்பாபுவுக்கு 'யெஸ்': சாய்பல்லவியின் அதிரடி முடிவு!

தெலுங்கு மெகா ஸ்டார் சிரஞ்சீவி நடிக்கும் திரைப்படத்தில் தங்கையாக நடிக்க முடியாது என்று கூறிய சாய்பல்லவி, தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபுக்கு தங்கையாக நடிக்க ஒப்புக் கொண்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.