பிரபல இயக்குனருக்கு கிளி ஜோசியம் பார்த்தவர்கள் கைது.. என்ன நடந்தது?

  • IndiaGlitz, [Tuesday,April 09 2024]

பிரபல இயக்குனருக்கு கிளி ஜோசியம் பார்த்த ஜோசியர்கள் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தமிழ் திரையுலகின் பிரபல இயக்குனர் தங்கர்பச்சான் கமர்சியலுக்காக இல்லாமல் நல்ல கருத்தை மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும் என்பதற்காக தரமான படங்களை இயக்கி வருகிறார் என்பதும் தெரிந்தது.

இந்த நிலையில் நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தலில் கடலூர் தொகுதியில் பாட்டாளி மக்கள் கட்சியின் வேட்பாளராக தங்கர் பச்சான் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அவர் கடந்த சில நாட்களாக தீவிரமாக தேர்தல் பிரச்சாரம் செய்து வருகிறார்.

இவ்வாறு இன்று அவர் தேர்தல் பிரச்சாரம் செய்து கொண்டிருந்த போது கிளி ஜோசியர்களை தற்செயலாக பார்த்து அவர், தனக்கு வெற்றி கிடைக்குமா என்று ஜோசியம் பார்த்து சொல்லும்படி கேட்டுக் கொண்டார். கிளியை கூண்டில் அடைத்து வைத்திருந்த ஜோசியர், கிளியை வெளியே கொண்டு வந்து ஒரு அட்டையை எடுக்கச் சொல்ல அந்த அட்டையில் அய்யனார் இருந்ததை பார்த்து ’உங்களுக்கு அய்யனாரே அருள் புரிந்து விட்டார், அதனால் நீங்கள் கண்டிப்பாக வெற்றி பெறுவீர்கள்’ என்று ஜோசியம் கூறினார்.

இதனை அடுத்து கிளி ஜோசியர்களுக்கு நன்றி சொல்லிவிட்டு கிளிக்கு வாழைப்பழத்தை ஊட்டிவிட்டு இயக்குனர் தங்கர்பச்சான் விடை பெற்று சென்றார். தங்கர் பச்சானுக்கு கிளி ஜோசியம் பார்த்த வீடியோ இணையத்தில் வைரலான நிலையில் கூண்டில் அடைத்து வைத்து கிளியை கொடுமைப்படுத்துவதா? என சிலர் சமூக வலைதளங்களில் பதிவு செய்த நிலையில் உடனடியாக வனத்துறையினர் அந்த ஜோசியர்களை கைது செய்தனர். அவர்களிடம் இருந்த 4 கிளிகளை பறிமுதல் செய்த வனத்துறையினர் அதன் பிறகு ஜோசியர்களை எச்சரித்து விடுதலை செய்து விட்டதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் வனத்துறை அதிகாரிகளின் இந்த செயலுக்கு பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார். இது குறித்து கருத்து தெரிவித்த நெட்டிசன்கள் அரசு உயிரியல் பூங்காவில் பல பறவைகள், விலங்குகள் கூண்டில் அடைத்து வைத்திருக்கும் நிலையில் ஒரு சாதாரண ஏழை ஜோசியம் பார்த்தது தவறா? என்று கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.

கிளி ஜோசியம் பார்ப்பது என்பது பல ஆண்டுகளாக தமிழகத்தில் ஒரு தொழிலாக ஆயிரக்கணக்கானோர் வைத்திருக்கும் நிலையில் பிரபல இயக்குனருக்கு கிளி ஜோசியம் பார்த்ததால் இரண்டு ஜோசியர்கள் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

More News

விஜய் ஒரு புத்திசாலி போட்டியாளர்.. அவருடன் மோதுவது நல்லது தான்: பாஜக நடிகை..

விஜய் ஒரு புத்திசாலி என்றும் அவருடன் அரசியல் ரீதியாக மோதுவது நல்லது தான் என்றும் விஜய்யுடன் நடித்தவரும் தற்போது பாரதிய ஜனதா கட்சியில் இருப்பவருமான பிரபல நடிகை ஒருவர் கூறி இருப்பது பரபரப்பை

வீட்டில் செல்வம், நிம்மதி, குழந்தை பாக்கியம் பெற வாஸ்து டிப்ஸ் | Ashok Kandasamy பேட்டி

புகழ்பெற்ற வாஸ்து நிபுணர் Ashok Kandasamy, ஆன்மீகக்ளிட்ஸ் யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில், வீட்டில் செல்வம், நிம்மதி, குழந்தை பாக்கியம் மற்றும் கணவன் மனைவி அந்நியோன்னியம்

இந்த 9ஐ நிச்சயம் கடைபிடியுங்கள்: விவாகரத்து மனு தாக்கல் செய்த மறுநாள் ஐஸ்வர்யா ரஜினியின் பதிவு..!

தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் சட்டப்படி பிரிவதற்கு நேற்று நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்ததாக தகவல் வெளியான நிலையில் இன்று ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தனது சமூக வலைத்தளத்தில் இந்த ஒன்பது

ரஷ்யாவில் 'கோட்' படப்பிடிப்பில் விஜய் என்ன செய்கிறார் பாருங்கள்: வைரல் வீடியோ..!

தளபதி விஜய் நடித்து வரும் 'கோட்' படத்தின் படப்பிடிப்பு தற்போது ரஷ்யாவில் நடந்து கொண்டிருக்கும் நிலையில் படக்குழுவினர் அனைவரும் ரஷ்யா சென்று உள்ளனர் என்பது அனைவரும் அறிந்ததே.

மறைந்த முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவின் மீதான மர்மம்.

ஒரு நடிகை நாட்டை ஆண்டு அரசியல் களத்தில் வெற்றி கண்டு மக்கள் மனதில் இன்று வரை நீங்கா இடத்தைப் பிடித்துள்ள இரும்பு பெண்மணி ஜெ.ஜெயலலிதா...