பொன்னியின் செல்வன் படத்தில் இணைந்த 'அசுரன்' பட நடிகர்

  • IndiaGlitz, [Saturday,November 16 2019]

மணிரத்னம் இயக்கவுள்ள ‘பொன்னியின் செல்வன்’ படத்தில் ஏற்கனவே கிட்டத்தட்ட இந்தியாவில் உள்ள முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து நடிக்க ஒப்பந்தமாகி வருகின்றனர். இந்த நிலையில் இந்த படத்தில் லேட்டஸ்ட்டாக ‘அசுரன்’ படத்தில் நடித்த நடிகர் ஒருவர் இணைந்துள்ளார்.

வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ், மஞ்சுவாரியர் நடித்த ‘அசுரன்’ திரைப்படத்தில் தனுஷின் மூத்த மகன் கேரக்டரில் நடித்த தீஜே என்பவர் ‘பொன்னியின் செல்வன்’ படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியிருப்பதாக செய்திகள் வெளிவந்துள்ளது. இவர் இந்த படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கவுள்ளார்.

வரும் டிசம்பர் முதல் ‘பொன்னியின் செல்வன்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு தாய்லாந்தில் நடைபெறவுள்ளது. இந்த படத்தில் வந்தியத்தேவன் கேரக்டரில் கார்த்தி, அருள்மொழிவர்மன் கேரக்டரில் ஜெயம் ரவி, பூங்குழலி கேரக்டரில் நயன்தாரா, சுந்தரசோழன் கேரக்டரில் அமிதாப்பச்சன், ஆதித்த கரிகாலன் கேரக்டரில் விக்ரம், குந்தவை கதாபாத்திரத்தில் கீர்த்தி சுரேஷ், நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் ’நந்தினி’ மற்றும் மந்தாகினி ஆகிய இரண்டு கேரக்டரில் ஐஸ்வர்யாராய் நடிக்கவுள்ளார்.

ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் வைரமுத்து 12 பாடல் வரிகளில், ரவிவர்மன் ஒளிப்பதிவில் தோட்டாதரணி கலை இயக்கத்தில் உருவாகவிருக்கும் இந்த படம் இந்திய சினிமாவின் பெருமைக்குரிய படமாக இருக்கும் என்றும் கருதப்படுகிறது
 

More News

போனிகபூரை திடீரென சந்தித்த நயன்தாரா: வலிமை நாயகியா?

அஜித் நடிக்கவுள்ள அடுத்த திரைப்படமான 'வலிமை' என்ற திரைப்படத்தின் ஆரம்ப கட்ட பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருவது என்பது தெரிந்ததே.

மகன் திருமணத்திற்கு சில மணி நேரத்திற்கு முன் பரிதாபமாக பலியான தந்தை!

மகனின் திருமணம் நடைபெற ஒருசில மணி நேரத்திற்கு முன்னர் நடந்த ஒரு எதிர்பாராத சம்பவத்தால் தந்தை மரணம் அடைந்த சோக நிகழ்ச்சி  இந்தூர் அருகே உள்ள உஜ்ஜயின் என்ற கிராமத்தில் நடந்துள்ளது 

டெல்லி ஓட்டலில் திருமணமான இளம்பெண் படுகொலை! ஃபேஸ்புக் காதலன் காரணமா?

டெல்லி ஹோட்டல் ஒன்றில் திருமணமான இளம் பெண் மர்மமான முறையில் கத்தியால் குத்தப்பட்டு கொலை செய்யப்பட்டிருப்பது அந்த பகுதியில் உள்ளவர்களை பெரும் அதிர்ச்சியை அளித்துள்ளது 

கணவரின் முதல் மனைவிக்கு ஆபாச படங்கள் அனுப்பிய 2வது மனைவி கைது!

தெலுங்கானா மாநிலத்தை சேர்ந்த வெங்கடேஸ்வர ராவ் என்பவருக்கு ஏற்கனவே திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளன. இந்த நிலையில் அவருக்கு சுபாஷினி என்ற 39 வயது பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டது

உதயநிதி குறித்த சர்ச்சை பதிவு: ஸ்ரீரெட்டியின் பரபரப்பு விளக்கம்

தெலுங்கு மற்றும் தமிழ் திரையுலக பிரபலங்கள் பலர் தன்னை படுக்கைக்கு அழைததாக பகிரங்கமாக குற்றம் சாட்டி பரபரப்பை ஏற்படுத்திய நடிகை ஸ்ரீரெட்டி தற்போது