திருமணமான 6 மாதங்களில் நல்ல செய்தி சொன்ன 'பாரதி கண்ணம்மா' சீரியல் நடிகை.. குவியும் வாழ்த்துக்கள்..!


Send us your feedback to audioarticles@vaarta.com


’பாரதி கண்ணம்மா’ சீரியல் மூலம் தனது நடிப்பை தொடங்கிய நடிகை சமீபத்தில் திருமணம் செய்து கொண்ட நிலையில், திருமணமாகி ஆறே மாதத்தில் நல்ல செய்தியை பகிர்ந்திருக்கிறார். இதனால், அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன.
விஜய் டிவியில் ஒளிபரப்பான ’பாரதி கண்ணம்மா’ சீரியலில், அஞ்சலி என்ற வில்லி கதாபாத்திரத்தில் நடித்தவர் கண்மணி மனோகரன். இந்த சீரியல் மூலம் தான் அவர் நடிகையாக அறிமுகமான நிலையில், இதன் பிரபலத்தால் தொடர்ந்து ஜீ தமிழில் ’அமுதாவும் அன்னலட்சுமியும்’ உள்ளிட்ட சில சீரியல்களில் நடித்தார்.
கடந்த ஆண்டு, தனது காதலர் அஸ்வத் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவரது கணவர் அஸ்வத், சன் டிவி தொகுப்பாளராக செயல்பட்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
கண்மணி - அஸ்வத் திருமணம் கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு நடைபெற்ற நிலையில், சமீபத்தில் இந்த தம்பதி வெளிநாடு சுற்றுலா சென்றனர். சிங்கப்பூர் உள்ளிட்ட பல நாடுகளில் எடுத்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளனர்.
அந்த வகையில், தற்போது ஒரு மகிழ்ச்சியான செய்தியையும் பகிர்ந்துள்ளனர். கண்மணி தற்போது கர்ப்பமாக உள்ளார். வயிற்றில் குழந்தையோடு இருக்கும் புகைப்படத்தையும், அவரது வயிற்றில் அஸ்வத் முத்தமிடும் புகைப்படத்தையும் இன்ஸ்டாகிராமில் பதிவு செய்துள்ளார். இதனை அடுத்து, ரசிகர்கள் தம்பதியினருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout

-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com