close
Choose your channels

என்னை மிஸ் பண்ணுவியா அஸ்வினு: ஷிவாங்கிற்கு அஸ்வினின் உருக்கமான பதில்!

Friday, April 9, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

விஜய் டிவியில் மாபெரும் வரவேற்புடன் ஒளிபரப்பாகி வரும் ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சியின் இறுதிக்கட்டம் வந்துவிட்டதால் ரசிகர்களுக்கு மட்டுமின்றி அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களுக்கும் சோகமாக உள்ளது

இந்த நிலையில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் ஃபைனல் படப்பிடிப்பு முடிவடைந்ததை அடுத்து உருக்கமாக அஸ்வின் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு பதிவை குறிப்பிட்டுள்ளார். அவர் கூறியிருப்பது:

குக் வித் கோமாளி என்பது ஒரு நிகழ்ச்சி அல்ல, எனக்கு ஒரு குடும்ப போன்ற அனுபவம். இந்த பயணம் எனக்கு நீண்ட நாள் நினைவில் பதிந்திருக்கும். இந்த நிகழ்ச்சி எனக்கு ஒரு அங்கீகாரத்தை அளித்துள்ளது. இந்த நிகழ்ச்சி முடிந்து விட்டது என்பதை என்னால் இன்னும் நம்பவில்லை

இந்த அணியுடன் மீண்டும் ஒரு நிமிடம் செலவிட முடியும் என்றாலும் நான் எங்கிருந்தாலும் வருவேன். என்னுடன் கலந்து கொண்ட சக போட்டியாளர்கள் மற்றும் எனக்கு உதவியாக இருந்த கோமாளிகள், கேமராமேன்கள், எடிட்டர்கள், நடுவர்கள், இயக்குனர்கள் மற்றும் சேனல் ஆகிய அனைவருக்கும் நான் எனது நன்றியை தெரிவிக்க விரும்புகிறேன். இந்த நிகழ்ச்சியின் வெற்றிக்கு ஒவ்வொரு ரசிகர்களும் காரணம். நீங்கள்தான் இந்த நிகழ்ச்சியை மிகப்பெரிய வெற்றி அடைய செய்தீர்கள், அதனால் உங்களுக்கும் எனது நன்றி

குறிப்பாக நான் ஷிவாங்கியை இங்கே சொல்லியே ஆகவேண்டும். அவர்தான் எனக்கு மிகவும் உற்சாகமூட்டினார். என்னுடைய வேலைக்கு உறுதுணையாகவும், வேடிக்கையாகவும் இருந்தது எனக்கு மிகுந்த உற்சாகத்தை அளித்தது. மேலும் ’என்னை நீங்கள் மிஸ் செய்கிறீர்களா? என ஷிவாங்கி கேட்டார், அதற்கு என்னுடைய பதில் ’ஆம், கண்டிப்பாக நான் உங்களை மிஸ் செய்கிறேன் என்பது தான்’ என்று அஸ்வின் உருக்கமாக கூறியுள்ளார்

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.