close
Choose your channels

ரஜினி, விஜய்யை முந்துகிறார் அதர்வா

Monday, December 28, 2015 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com


கோலிவுட் திரையுலகில் அறிமுகமாகும் நடிகர்களுக்கு ஒரே ஒரு வெற்றிதான் தேவை. அந்த ஒரு வெற்றியை பெற்றுவிட்டால் அடுத்த நிமிடமே அவர் முன்னணி நடிகர்களின் பட்டியலில் இணைவதோடு அவருடைய மார்க்கெட்டும் எகிறிவிடும் என்பதை பல ஆண்டுகளாக பார்த்து வருகிறோம். எனவே ஒரே ஒரு வெற்றிக்காக பல நடிகர்கள் போராடி வருகின்றனர். அந்த ஒரு வெற்றி சிலருக்கு உடனே கிடைத்துவிடும். சிலர் ஆண்டுக்கணக்காக காத்திருக்க வேண்டிய நிலை ஏற்படும்.

அந்த வகையில் ஒரே ஒரு வெற்றிக்காக கடந்த சில ஆண்டுகளாக காத்திருந்த நடிகர்களின் பட்டியலில் இருந்தவர் அதர்வாமுரளியும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது. சமீபத்தில் வெளிவந்த 'ஈட்டி' படம் சூப்பர் ஹிட் ஆனதை தொடர்ந்து அதர்வாவுக்கு கோலிவுட்டில் தற்போது மதிப்பு அதிகரித்துள்ளது.


அவர் நடித்து வரும் 'கணிதன்' திரைப்படத்தின் படப்பிடிப்பு இதுவரை மெதுவாக நடந்து வந்த நிலையில் தற்போது 'ஈட்டி' படத்தின் வெற்றி காரணமாக முடுக்கிவிடப்பட்டு, கிட்டத்தட்ட நிறைவுப்பகுதிக்கு வந்துள்ளது. சூப்பர் ஸ்டார் ரஜினியின் 'கபாலி' மற்றும் இளையதளபதி விஜய்யின் 'தெறி' படங்களை தயாரித்து வரும் கலைப்புலி எஸ்.தாணு இந்த படத்தை தயாரித்து வருகிறார்.

அதர்வா, கேதரின் தெரசா, கே.பாக்யராஜ், மனோபாலா, கருணாகரன், ஆடுகளம் நரேன் மற்றும் ஒய்.ஜி.மகேந்திரா உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படத்தை டி.என்.சந்தோஷ் இயக்கியுள்ளார். டிரம்ஸ் சிவமணி இசையமைத்துள்ள இந்த படத்திற்கு அரவிந்த் கிருஷ்ணா ஒளிப்பதிவும் புவன்ஸ்ரீனிவாசன் படத்தொகுபும் செய்து வருகின்றனர்.

வரும் ஏப்ரலில் 'தெறி' மற்றும் மே மாதத்தில் 'கபாலி என அடுத்தடுத்து இரண்டு படங்களை தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு ரிலீஸ் செய்யவுள்ள நிலையில் இந்த இரண்டு படங்களுக்கு முன் பிப்ரவரியில் 'கணிதன்' படத்தை ரிலீஸ் செய்ய அவர் திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.