close
Choose your channels

அதர்வாவின் முதல் முயற்சிக்கு கைகொடுக்கும் ஏ.ஆர்.முருகதாஸ்

Friday, December 2, 2016 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

மறைந்த நடிகர் முரளியின் மகனும், நடிகருமான அதர்வா தற்போது கோலிவுட் திரையுலகில் வளர்ந்து வரும் நாயகனாக விளங்கி வருகிறார். இந்நிலையில் அதர்வாவின் சொந்த நிறுவனமான 'கிக் ஆஸ் எண்டர்டெயின்மெண்ட்' நிறுவனம் தயாரிக்கும் முதல் படமான 'செம போத ஆகாதே' படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் இந்த படத்தின் டீசர் பிரபல இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் அவர்களால் வரும் 5ஆம் தேதி மாலை 6 மணிக்கு வெளியாகவுள்ளது. அதர்வாவின் முதல் தயாரிப்பு படத்திற்கு ஏ.ஆர்.முருகதாஸ் கைகொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
அதர்வா, மிஷ்தி, அனைகா சோட்டி, ஜான்விஜய், கருணாகரன், எம்.எஸ்.பாஸ்கர், மனோபாலா உள்ளிட்ட பலர் நடித்து வரும் இந்த படத்தை பத்ரி வெங்கடேஷ் இயக்கி வருகிறார். இவர் அதர்வாவின் முதல் படமான 'பாணா காத்தாடி' படத்தை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்திற்கு யுவன்ஷங்கர் ராஜா இசையமைத்து வருகிறார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.