அட்லி-ப்ரியாவுக்கு மறக்க முடியாத நாள்.. குவியும் வாழ்த்துக்கள்..!

  • IndiaGlitz, [Friday,November 10 2023]

இயக்குனர் அட்லி மற்றும் அவரது மனைவி பிரியா அட்லி ஆகிய இருவருக்கும் நேற்று மறக்க முடியாத நாளை முன்னிட்டு அந்த நாளை கொண்டாடினர். அவர்களுக்கு திரையுலகினர் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர்

தமிழ் திரை உலகின் முன்னணி இயக்குனரான அட்லி சமீபத்தில் ஷாருக்கான் நடித்த ’ஜவான்’ என்ற திரைப்படத்தை இயக்கினார் என்பதும் அந்த படம் ரூ.1000 கோடிக்கு மேல் வசூல் செய்து மிகப் பெரிய வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் கடந்த 2014 ஆம் ஆண்டு நவம்பர் 9ஆம் தேதி கிருஷ்ணப்பிரியா என்பவரை அட்லி திருமணம் செய்து கொண்ட நிலையில் நேற்று அவர்களது ஒன்பதாவது திருமண நாள் கொண்டாடப்பட்டது. இதுகுறித்து ப்ரியா அட்லி சமூக வலைதளத்தில் பதிவு செய்து ஒன்பதாவது ஆண்டு திருமண நாளை மகிழ்ச்சியுடன் கொண்டாடுகிறோம். எங்களுக்கு வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் நன்றி என்று தெரிவித்துள்ளார்.

அட்லி-ப்ரியா தம்பதிக்கு நடிகை சாயிஷா, நாசரின் மனைவி கமலா நாசர் உள்ளிட்ட பல பிரபலங்கள் திருமண நாள் நல்வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளனர். இது குறித்த புகைப்படம் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

அட்லி - பிரியா தம்பதிக்கு கடந்த ஜனவரி மாதம் ஆண் குழந்தை பிறந்தது என்பதும் இந்த குழந்தைக்கு மீர் என்று பெயர் வைத்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

More News

தமன்னா நடித்தால் நடிக்க மாட்டேன் என கூறிய நடிகைகள்: பிரபல ஹீரோ கூறிய ரகசியம்..!

தமன்னா நடித்த படத்தில் நாங்கள் நடிக்க மாட்டோம் என பல நடிகைகள் பின்வாங்கியதாக பிரபல ஹீரோ ஒருவர் தெரிவித்துள்ளார்.

இசைஞானி இளையராஜா வாழ்க்கை வரலாறு திரைப்படம் குறித்த அறிவிப்பு.. படப்பிடிப்பு எப்போது?

மெர்குரி குரூப் இந்தியா, தென்னிந்திய  பொழுதுபோக்கு மற்றும்  திரை வணிகங்களை மையமாகக் கொண்டு, கனெக்ட் மீடியாவுடன் இணைந்து மெர்குரி மூவிஸ் என்ற சிறப்புப் பிரிவாக எங்கு செயல்பட உள்ளது.

முழுப்படத்திலும் கார்த்தியை வெளிப்படுத்தாமல் நடிப்பது சவாலாக இருந்தது: ஜப்பான் படம் குறித்து கார்த்தி

ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிப்பில் கார்த்தி நடிப்பில் உருவாகியுள்ள படம் 'ஜப்பான்'. கார்த்தியின் 25வது படமாக உருவாகியுள்ள இப்படத்தை இயக்குநர் ராஜு முருகன் இயக்கியுள்ளார். வரும் தீபாவளி பண்டிகை

பிரதீப்பே இருந்திருக்கலாம் போல.. மாயா புலம்பலுக்கு இந்த போட்டியாளர் தான் காரணமா?

பிக் பாஸ்   போட்டியாளர்களில் ஒருவரான பிரதீப்பால் பெண்களுக்கு ஆபத்து என்ற குற்றச்சாட்டை சுமத்தி மாயா குரூப்பினர் சதி செய்து வெளியே தள்ளிவிட்டனர். பிரதீப் சென்று ஒரு வாரம் ஆகிவிட்ட நிலையில்,

பிக்பாஸ் வீட்டிற்கு மீண்டும் வருகிறாரா பிரதீப்?  

பிக் பாஸ் நிகழ்ச்சியின் போட்டியாளர்களில் ஒருவரான பிரதீப் ஆண்டனி கடந்த வாரம் பெண்களுக்கு ஆபத்தானவர் என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் ரெட் கார்ட் காண்பிக்கப்பட்டதால்