close
Choose your channels

கொரோனா தடுப்பு நிதியாக அட்லி கொடுத்த தொகை

Friday, April 10, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக கடந்த இரண்டு வாரங்களுக்கும் மேல் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதை அடுத்து சினிமா தொழிலாளர்கள் வேலை இன்றி வருமானமின்றி வறுமையில் வாடி வருகின்றனர். இதனை அடுத்து பெப்சி அமைப்பின் தலைவர் ஆர்கே செல்வமணி வேண்டுகோளை அடுத்து சினிமா தொழிலாளர்களுக்கு உதவிகள் குவிந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

அதேபோல் நடிகர் சங்கத்தில் உள்ள நலிந்த நடிகர்களுக்கும், மற்ற நிறைந்த திரையுலகைச் சேர்ந்தவர்களுக்கும் பல பிரபலங்கள் லட்சக்கணக்கில் கோடிக்கணக்கில் நிதி உதவி செய்து வருகின்றனர் என்பது தெரிந்ததே. சமீபத்தில்கூட அஜித் ரூ.1.25 கோடியும், ராகவா லாரன்ஸ் ரூ.3 கோடியும் நிதி உதவி செய்தனர் என்பது தெரிந்ததே.

இந்த நிலையில் விஜய் நடித்த ’தெறி’, ‘மெர்சல்’ மற்றும் ’பிகில்’ ஆகிய திரைப்படங்களை இயக்கிய பிரபல இயக்குனர் அட்லி தனது பங்காக ரூபாய் 10 லட்சம் நிதி உதவி செய்துள்ளார். இதில் 5 லட்சம் பெப்சி அமைப்பில் உள்ள தொழிலாளர்களுக்கும் 5 லட்சம் இயக்குனர் சங்கத்திற்கும் அட்லி அளித்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. இதனை அடுத்து மேலும் பல பிரமுகர்கள் ஊரடங்கு உத்தரவு காரணமாக வறுமையில் வாடும் தொழிலாளர்களுக்காக உதவி செய்ய முன் வந்து கொண்டிருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.