இந்தியாவுக்கே பெருமை சேர்க்கும் படமாக இருக்கும்: டாக்டர் பட்டம் பெற்ற அட்லி பேட்டி..!


Send us your feedback to audioarticles@vaarta.com


இயக்குனர் அட்லிக்கு இன்று கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது. பட்டம் பெற்ற பிறகு செய்தியாளர்களை சந்தித்த அவர், அல்லு அர்ஜுன் நடிக்கும் புதிய படம் குறித்து சில அப்டேட்டுகளை கொடுத்தார்.
அவர் கூறியதாவது: "இதுவரை இந்தியாவில் தயாரான படங்களிலேயே மிகப்பெரிய பொருட்செலவில் உருவாகும் படங்களில் ஒன்றாக இந்தப் படம் இருக்கும். இந்தியாவிலேயே மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகும் இந்தப் படத்தில் நிறைய புதிய தொழில்நுட்பங்களை சேர்த்துள்ளோம்.
நம் எல்லோருக்கும் பெருமை சேர்க்கும் படமாக இந்த படம் இருக்கும் என்று எதிர்பார்க்கிறேன். படத்தின் ரிலீஸ் தேதியை தயாரிப்பாளர் தான் முடிவு செய்வார். படம் எடுப்பது மட்டும்தான் நம் வேலை," என்று ஒரு கேள்விக்கு பதிலளித்தார்.
மேலும், "இந்தப் படத்தில் நிறைய கனவுகள் உள்ளன. எல்லா தொழில்நுட்பங்களையும் ஒன்றாக இந்த படத்தில் இணைக்க முயற்சிக்கிறோம்," என்றும் அட்லி தெரிவித்தார்.
அட்லி இயக்கத்தில் அல்லு அர்ஜுன் மற்றும் தீபிகா படுகோனே நடிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருப்பதாகவும், இந்த படத்திற்கான கிராபிக்ஸ் காட்சிகளின் பணி அமெரிக்காவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout

-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com