close
Choose your channels

வீரமரணம் அடைந்த மாவீரர்களுக்கு இதய அஞ்சலி செலுத்திய அட்லி!

Wednesday, June 17, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

இந்தியா மற்றும் சீன எல்லையான லடாக் பகுதியில் நேற்று முன்தினம் நள்ளிரவு நடந்த இரு நாட்டு ராணுவ வீரர்களுக்கு இடையிலான மோதலில் முதல் கட்டமாக 3 இந்திய ராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்தனர் என்ற செய்தியை ஏற்கனவே பார்த்தோம். தமிழகத்தை சேர்ந்த ராணுவ வீரர் பழனி உள்பட வீரமரணமடைந்த மூவருக்கும் இந்திய நாடே வணக்கம் செலுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் அதன் பின் நேற்று இரவு திடீரென படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வந்த 17 ராணுவ வீரர்களும் வீரமரணம் அடைந்ததாக அறிவிக்கப்பட்டதால் இந்திய தரப்பில் பலியானவர்களின் எண்ணிக்கை 20 ஆக உயர்ந்தது.

இந்த நிலையில் முதல் கட்டமாக உயிரிழந்த 3 இந்திய ராணுவ வீரர்களுக்கு இயக்குனர் அட்லி தனது இதய அஞ்சலியை தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். தமிழகத்தைச் சேர்ந்த பழனி மற்றும் சந்தோஷ் பாபு, ஓஜா ஆகிய மூவருக்கும் தனது இதய அஞ்சலி என்றும் மூவருக்கும் சல்யூட் என்றும் அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். விஜய் நடித்த தெறி, மெர்சல் மற்றும் பிகில் ஆகிய சூப்பர் ஹிட் படங்களை இயக்கிய இயக்குனர் அட்லீயின் இந்த பதிவு தற்போது இணையதளங்களில் வைரலாக வருகிறது

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.