500 எடுத்தால் 2500: ஏடிஎம் மையத்தில் குவிந்த பொதுமக்கள்!

  • IndiaGlitz, [Thursday,June 16 2022]

மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள ஏடிஎம் மையத்தில் 500 ரூபாய் எடுத்தால் 2500 ரூபாய் வருவதாக வெளி வந்த தகவலை அடுத்து அந்த ஏடிஎம் மையத்தில் பொதுமக்கள் குவிந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள நாக்பூர் என்ற பகுதியில் வங்கி வாடிக்கையாளர் ஒருவர் 500 ரூபாய் எடுப்பதற்காக ஏடிஎம் மையத்திற்கு சென்றார். அப்போது அவருக்கு 2500 ரூபாய் ஏடிஎம் மிஷினில் இருந்து வந்துள்ளது. இதனால் ஆச்சரியமடைந்த அவர் தனது வங்கி கணக்கை சோதனை செய்தபோது 500 ரூபாய் மட்டுமே கழிந்து இருந்தது தெரியவந்தது.

இதனை அடுத்து அவர் சோதனை செய்வதற்காக மீண்டும் 500 ரூபாய் எடுத்தபோது மீண்டும் 2500 ரூபாய் வந்தது. இந்த தகவல் அந்த பகுதியில் மிக வேகமாக பரவியதை அடுத்து, அந்த ஏடிஎம்மில் பணம் எடுக்க பொதுமக்கள் நீண்ட வரிசையில் குவிந்தனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த வங்கி ஊழியர்கள் உடனடியாக காவல்துறை உதவியோடு சம்பந்தப்பட்ட ஏடிஎம் மையத்திற்கு சென்று ஏடிஎம் மையத்தை இழுத்து மூடினர். இது குறித்து முதல் கட்ட விசாரணை செய்தபோது 100 ரூபாய் நோட்டு வைக்க வேண்டிய இடத்தில் 500 ரூபாய் நோட்டு தவறுதலாக வைக்கப்பட்டதால் இந்த தவறு நேர்ந்து உள்ளதாக தெரிகிறது.

இதுகுறித்து காவல்துறையினரும் வாங்கி அதிகாரிகளும் விசாரணை செய்து வருகின்றனர். இதுவரை 500 ரூபாய்க்கு பதிலாக 2500 ரூபாய் எடுத்தவர்கள் மீது எந்தவிதமான வழக்கும் பதிவு செய்யப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

More News

வாயில் பரோட்டாவுடன் உயிரிழந்த தொழிலாளி: விஜய் அலுவலகத்தில் பரபரப்பு

நடிகர் விஜய் அலுவலகத்தில் வாயில் புரோட்டாவுடன் ஒரு தொழிலாளி மரணம் அடைந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நாளை 'தலைவர் 169' அப்டேட்? சன்பிக்சர்ஸ் டுவிட்!

சன் பிக்சர்ஸ் நிறுவனம் சற்று முன் தனது டுவிட்டர் பக்கத்தில் நாளை காலை 11 மணிக்கு முக்கிய அறிவிப்பு வெளியாக இருப்பதாக அறிவித்துள்ளது. மேலும் இந்த அறிவிப்பில் ஸ்டார் புகைப்படத்தை

விஜய்யின் 'மாஸ்டர்' சாதனையை உடைத்தது 'விக்ரம்': எப்படி தெரியுமா?

தளபதி விஜய் நடித்த 'மாஸ்டர்' திரைப்படம் இதுவரை ஒரு முக்கிய சாதனையை தக்க வைத்திருந்த நிலையில் அந்த சாதனையை தற்போது உலகநாயகன் கமல்ஹாசனின் 'விக்ரம்' திரைப்படம் முறியடித்து உள்ளதாக தகவல் .

'கேஜிஎப்' நடிகர் யாஷ் அடுத்த படத்தின் நாயகி 'பீஸ்ட்' நடிகையா?

 சமீபத்தில் வெளியான யாஷ் நடித்த 'கேஜிஎப் 2' திரைப்படம் மிகப் பெரிய வெற்றி பெற்றது என்பதும் இந்த படம் உலகம் முழுவதும் ஆயிரம் கோடி ரூபாய்க்கும் அதிகமாக வசூல் ஆனது என்பதும் குறிப்பிடத்தக்கது.

சாய்பல்லவிக்கு மிரட்டல்: சிம்பு, தனுஷ் நடிகை ஆதரவு!

சமீபத்தில் சாய்பல்லவி பேசிய ஒரு கருத்து பெரும் சர்ச்சையான நிலையில் அவருக்கு மிரட்டல் வந்து கொண்டிருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் சிம்பு, தனுஷ் படங்களில் நடித்த நடிகை,