close
Choose your channels

4 வயது மகனுடன் படகு சவாரி செய்த பிரபல நடிகை திடீர் மாயம்: தற்கொலை செய்து கொண்டாரா?

Thursday, July 9, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரபல நடிகை ஒருவர் நான்கு வயது மகனுடன் படகு சவாரி செய்ய சென்றபோது திடீரென மாயமானதாக பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

பிரபல அமெரிக்க தொலைக்காட்சி நடிகை நயா ரிவேரா. இவர் ஜூலை 8ஆம் தேதி கலிபோர்னியாவில் உள்ள ஒரு ஏரியில் வாடகை படகில் மகனுடன் தனியாக சவாரி சென்றார். அவர் நீண்ட நேரம் ஆகியும் கரை திரும்பவில்லை. இதனை அடுத்து காவல் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, தேடுதல் வேட்டை நடத்தப்பட்டது

நீண்ட நேர தேடுதலுக்கு பின் நயா ரிவேரா மகன் மட்டும் கண்டுபிடிக்கப்பட்டார். நயா ரிவேரா மகனிடம் போலீசார் விசாரித்த போது தனது தாயார் தண்ணீரில் குதித்ததாகவும், அதன்பின் மேலே வரவில்லை என்றும் கூறினார். இதனை அடுத்து அவர் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது

நடிகை நயா ரிவேராவை தேடுவதற்காக ஆளில்லா விமானம் மற்றும் நீச்சல் வீரர்கள் தீவிர நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். இருப்பினும் விடிய விடிய தேடியும் அவரை பற்றிய எந்தவிதமான தகவலும் கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது இதுகுறித்து போலீசார் விசாரணை செய்து வருவதாகவும் அவர் ஏரியில் தற்கொலை செய்து கொள்ளவே விழுந்திருக்கலாம் என்ற கோணத்திலும் விசாரணை நடைபெற்று வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.