மீண்டும் மாணவர்களுடன் இணைந்த ராகவா லாரன்ஸ்

  • IndiaGlitz, [Monday,February 06 2017]

உலகையே திரும்பி பார்க்க வைத்த சமீபத்திய நிகழ்ச்சி மெரீனாவில் மாணவர்கள் நடத்திய ஜல்லிக்கட்டு புரட்சி போராட்டம். இந்த போராட்டத்தின் பயனாக மத்திய, மாநில அரசுகள் இணைந்து ஜல்லிக்கட்டுக்கான நிரந்தர சட்டத்தை இயற்றின. இந்த போராட்டத்திற்கு அனைத்து துறையினர்களும் ஆதரவு கொடுத்தாலும் அதில் திரைத்துறையினர்களின் பங்கு சற்று அதிகம் என்றே கூறலாம். குறிப்பாக களத்தில் மாணவர்களுடன் இறங்கி போராடியதோடு, அவர்களின் தேவையையும் பூர்த்தி செய்தவர் ராகவா லாரன்ஸ்

மேலும் தேவைப்பட்டால் மாணவர்களுடன் இணைந்து அரசியலிலும் குதிக்க தயார் என்று கூறியவர் ராகவா லாரன்ஸ். இந்நிலையில் அவர் நடித்து முடித்த 'மொட்டசிவா கெட்டசிவா' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது.

மாணவர்கள் மேல் மிகுந்த பாசம் வைத்துள்ள ராகவா லாரன்ஸ், தன்னுடைய இந்த படத்தின் இசை வெளியீட்டை மாணவர்களிடையே நடத்தியதுதான் இந்த நிகழ்ச்சியின் சிறப்பு. அதுமட்டுமின்றி இந்த படத்தின் பாடல்களை தமிழக விவசாயிகளின் பிரதிநிதிகள் வெளியிட அதை மாணவர்கள் பெற்றுக்கொண்டார்கள். வழக்கமாக விஐபிக்கள் மட்டுமே ஒரு படத்தின் பாடல்களை வெளியிட்டு வந்த நிலையில் இந்த நிகழ்ச்சி முற்றிலும் வித்தியாசமாக அமைந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

More News

காதலர் தினத்தில் ஏ.ஆர்.ரஹ்மான். 'அழகியே' அடுத்து 'வான்'

மணிரத்னம் இயக்கத்தில் கார்த்தி நடித்துள்ள 'காற்று வெளியிடை' படத்தின் 'அழகியே' சிங்கிள் பாடல் கடந்த 2ஆம் தேதி வெளிவந்து ஏ.ஆர்.ரஹ்மானின் மாபெரும் வரவேற்பை பெற்றது. இந்நிலையில் இந்த படத்தின் அடுத்த சிங்கிள் பாடல் ரிலீஸ் தேதி குறித்த தகவல் தற்போது வெளிவந்துள்ளது...

தமிழகத்துக்குப் புது முதல்வர். ஓபிஎஸ் பதவி விலகல்

முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதா மரணமடைந்தபின் முதல்வராகப் பொறுப்பேற்றுக்கொண்ட ஓ.பன்னீர்செல்வம் பதவி விலகப் போகிறார் என்றும்  அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் பொதுச் செயலாளர் வி;கே.சசிகலா தமிழகத்தின் அடுத்த முதலமைச்சராகப் பொறுப்பேற்பார் என்று கட்சியின் சார்பில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது...

தீர்ப்பு எப்படி இருக்கும். கடைசி நிமிடத்தில் ஆச்சார்யா கருத்து

ஜெயலலிதா, சசிகலா உள்பட நால்வர் மீதான சொத்துக்குவிப்பு வழக்கின் தீர்ப்பு எப்படி இருக்கும் என்று இந்த வழக்கில் கர்நாடக அரசு சார்பில் வாதாடிய ஆச்சார்யா கடைசி நிமிடத்தில் தனது கருத்தை தெரிவித்துள்ளார்...

கமல்ஹாசனை அடுத்து நந்தினிக்காக குரல் கொடுத்த திரையுலக பிரமுகர்கள்

சமீபத்தில் அரியலூர் அருகே நந்தினி என்ற 17 வயது இளம்பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது...

விஷாலின் வேட்புமனு மீது தேர்தல் அதிகாரியின் அதிரடி நடவடிக்கை

தென்னிந்திய நடிகர் சங்கத்தின் செயலாளர் விஷால், தயாரிப்பாளர் சங்க தேர்தலில் தலைவர் பதவிக்காக போட்டியிட நேற்று வேட்புமனு தாக்கல் செய்தார் என்பதை நேற்று பார்த்தோம். இவரது வேட்புமனுவை உலகநாயகன் கமல்ஹாசன் முன்மொழிந்தார் என்பது குறிப்பிடத்தக்கது...