close
Choose your channels

டெஸ்ட் களத்தில் இந்திய வீரர்களை சீண்டிய ஆஸ்திரேலிய கேப்டனுக்கு இப்படி ஒரு நிலமையா?

Monday, January 25, 2021 • தமிழ் Sport News Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

ஆஸ்திரேலியாவிற்கு எதிரான டெஸ்ட் தொடரின் வெற்றியைத் தொடர்ந்து இங்கிலாந்து அணிக்கு இடையிலான போட்டிகளுக்கு இந்திய அணி தயாராகி வருகிறது. இந்நிலையில் நெட்டிசன்கள் ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரின் கேப்டன் டிம் பெய்னை ட்ரோல் செய்து சமூக வலைத்தளத்தில் கிண்டல் அடித்து வருகின்றனர். காரணம் அவர் மெல்பெர்னில் நடைபெற்ற 2 ஆவது டெஸ்ட் தொடரில் இந்திய அணி வெற்றிப் பெற்றதில் இருந்தே களத்தில் இந்திய வீரர்களிடம் கடுமையாக நடந்து கொண்டார்.

அதோடு சிட்னியில் நடைபெற்ற 3 ஆவது டெஸ்ட் தொடர் போட்டியில் தமிழக வீரர் அஸ்வினை பேட்டிங் செய்யவிடாமல் பேசிக்கொண்டே இருந்தார். ஒரு கட்டத்தில் அஸ்வினை திட்டவும் செய்தார். இப்படியே தொடர்ந்த இவரது நடவடிக்கையால் பிரின்ஸ்பனில் நடைபெற்ற 4 ஆவது டெஸ்ட் தொடர் போட்டியின்போது சிலர் இவரை கேப்டன்சியில் இருந்தே தூக்க வேண்டும் எனக் கருத்துக் கூறி வந்தனர். ஒருவழியாக இந்திய அணி, ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடர் போட்டியை 2-1 என்ற கணக்கில் வென்று நாடு திரும்பியது.

ஆனால் அப்போதே டிம் பெய்னைக் குறித்து பலரும் கவலை தெரிவிக்க ஆரம்பித்து விட்டனர். இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் கூட “டிம் பெய்ன் அந்த பொறுப்பில் நீண்ட நாள் நீடிப்பது கடினம்” என்று கருத்துத் தெரிவித்து இருந்தார். முன்னதாக தென் ஆப்பிரிக்க தொடரில் ஸ்மித் பந்தை சேதப்படுத்திய சர்ச்சையில் சிக்கியதால் மட்டுமே டிம் பெய்ன் ஆஸ்திரேலிய டெஸ்ட் அணியின் கேப்டனாக நியமிக்கப் பட்டார் என்பதும் குறிப்பிடத்க்கது.

டிம் பெய்ன் இதற்கு முன்பு 22 டெஸ்ட் போட்டிகளில் 11 வெற்றி, 7 தோல்வி, 4 டிரா என ஆஸ்திரேலிய அணியை கேப்டனாக இருந்து வழிநடத்தியவர். இருந்தாலும் இந்திய அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இவரது கேப்டன்ஷி கடும் விமர்சனத்துக்கு உள்ளானது. மேலும் மற்ற நாட்டு வீரர்களிடம் இவர் சர்ச்சைக்குரிய வகையில் நடந்து கொள்கிறார் என்றும் கூறப்பட்டது.

இந்நிலையில் டிம் பெய்ன் இனி கேப்டனிசியில் நீடிப்பாரா என்ற சந்தேகமும் வலுத்தது. அந்த சந்தேகத்திற்கு தற்போதே முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது மாதிரி தற்போது நடைபெற்று வரும் பிக் பாஷ் லீக் டி20 போட்டியில் இவருக்கு விளையாட வாய்ப்பு மறுக்கப்பட்டு உள்ளதும் குறிப்பிடத்தக்கது. பிக் பாஷ் லீக் டி20 போட்டியில் டிம் பெய்ன், ஹோபார்ட் ஹரிகேன்ஸ் அணிக்காக விளையாட சென்றார். ஆனால் அவருக்கு அணியில் விளையாட வாய்ப்பு மறுக்கப்பட்டு வெறுமனே அணி வீரர்களுக்கு தண்ணீர் கொண்டு வரும் வேலையை மட்டும் செய்து வருகிறார்.

தற்போது பிக் பாஷ் லீக் டி20 போட்டியில் அணி வீரர்கள் களத்தில் விளையாடி கொண்டு இருக்கும்போது டிம் பெய்ன் தண்ணீர் கொண்டு வந்து தருகிறார். இந்தப் புகைப்படத்தை இந்திய கிரிக்கெட் ரசிகர்கள், இது இவருக்குத் தேவைதான் என்றும் உரிய இடம் கொடுக்கப்பட்டு விட்டது என்றும் கிண்டல் செய்து வருகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.