அருண்விஜய்-அறிவழகன் படத்தின் அடுத்தடுத்த அதிரடி அறிவிப்புகள்

  • IndiaGlitz, [Monday,December 09 2019]

அருண் விஜய் நடிக்கவிருக்கும் 31வது படத்தை ’ஈரம்’ இயக்குனர் அறிவழகன் இயக்கவுள்ளார் என்ற செய்தியை ஏற்கனவே பார்த்தோம். ஏற்கனவே ’குற்றம் 23’ என்ற படத்தில் இணைந்த அறிவழகன்-அருண் விஜய் ஜோடி மீண்டும் இந்த படத்தில் இணைகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இந்த படத்தில் இடம்பெற்றுள்ள நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த அறிவிப்பு சற்று முன் வெளியாகி உள்ளது. இந்த படத்தின் நாயகியாக ரெஜினா நடிக்க உள்ளதாகவும், இன்னொரு முக்கிய கேரக்டரில் ஸ்டெபி பட்டேல் நடிக்க உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த படத்தின் இசையமைப்பாளர் சாம் சிஎஸ் என்றும், ஒளிப்பதிவாளர் ராஜசேகர் என்றும், படத்தொகுப்பாளர் சாபு ஜோசப் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த படத்தில் பிரபல குணசித்திர நடிகர் பகவதி பெருமாள் நடிக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஸ்பை ஆக்ஷன் த்ரில்லராக உருவாகவிருக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு சென்னை ஐதராபாத் டெல்லி உள்ளிட்ட பல இடங்களில் நடைபெற இருப்பதாகவும் இந்த படத்தை ஆல்இன்ஆல் பிக்சர்ஸ் மற்றும் விஜய ராகவேந்திரா நிறுவனம் ஆகியவை இணைந்து தயாரிக்க உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கெனவே விஜய் நடிப்பில் ’மாபியா’, அக்னி சிறகுகள் ஆகிய படங்கள் தயாராகி வருகின்றன என்பது தெரிந்ததே.

More News

ஆர்யா-சாயிஷாவுக்கு அறிவித்த மகிழ்ச்சியான செய்தி!

நடிகர் ஆர்யாவும் அவருடைய மனைவியும் பிரபல நடிகை சாயிஷாவும் ஜோடியாக முதன் முதலில் நடித்து வரும் திரைப்படம் 'டெடி'. இந்த படத்தின் படப்பிடிப்பு க

2021ம் ஆண்டு தேர்தலிலும் ரஜினி இதையேதான் கூறுவார்: அமைச்சர் ஜெயக்குமார்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் உலக நாயகன் கமல்ஹாசன் ஆகிய இருவரும் கடந்த 40 ஆண்டுகளாக நண்பர்களாக இருந்தாலும், திரையுலகிலும் சரி அரசியலிலும் சரி இரு துருவங்களாக உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது

தமிழக நலனுக்காக டேட்டிங் செய்ய போகிறேன்: பிக்பாஸ் நடிகை அறிவிப்பு

தமிழகத்தின் நலனுக்காக நடிகர் ஒருவருடன் டேட்டிங் செய்யப்போகிறேன் என பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நடிகை ஒருவர் தனது சமூக வலைதளப் பக்கத்தில் கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது 

'தர்பார்' பேச்சுக்கு வருத்தம் தெரிவித்த ராகவா லாரன்ஸ்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'தர்பார்' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் ராகவா லாரன்ஸ் பேசிய போது சிறுவயதில் கமல் போஸ்டர் மீது சாணி அடித்ததாக தெரிவித்திருந்தார்

தெலுங்கானா என்கவுண்டருக்கு அஜித் ரசிகர்களின் வாழ்த்து போஸ்டர்

சமீபத்தில் தெலுங்கானா மாநிலத்தில் பெண் மருத்துவர் ஒருவர் நான்கு கயவர்களால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு உயிரோடு எரித்துக் கொலை செய்யப்பட்டார்.