close
Choose your channels

அருண்விஜய்-அறிவழகன் படத்தின் அடுத்தடுத்த அதிரடி அறிவிப்புகள்

Monday, December 9, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

அருண் விஜய் நடிக்கவிருக்கும் 31வது படத்தை ’ஈரம்’ இயக்குனர் அறிவழகன் இயக்கவுள்ளார் என்ற செய்தியை ஏற்கனவே பார்த்தோம். ஏற்கனவே ’குற்றம் 23’ என்ற படத்தில் இணைந்த அறிவழகன்-அருண் விஜய் ஜோடி மீண்டும் இந்த படத்தில் இணைகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இந்த படத்தில் இடம்பெற்றுள்ள நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த அறிவிப்பு சற்று முன் வெளியாகி உள்ளது. இந்த படத்தின் நாயகியாக ரெஜினா நடிக்க உள்ளதாகவும், இன்னொரு முக்கிய கேரக்டரில் ஸ்டெபி பட்டேல் நடிக்க உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த படத்தின் இசையமைப்பாளர் சாம் சிஎஸ் என்றும், ஒளிப்பதிவாளர் ராஜசேகர் என்றும், படத்தொகுப்பாளர் சாபு ஜோசப் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த படத்தில் பிரபல குணசித்திர நடிகர் பகவதி பெருமாள் நடிக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஸ்பை ஆக்ஷன் த்ரில்லராக உருவாகவிருக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு சென்னை ஐதராபாத் டெல்லி உள்ளிட்ட பல இடங்களில் நடைபெற இருப்பதாகவும் இந்த படத்தை ஆல்இன்ஆல் பிக்சர்ஸ் மற்றும் விஜய ராகவேந்திரா நிறுவனம் ஆகியவை இணைந்து தயாரிக்க உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கெனவே விஜய் நடிப்பில் ’மாபியா’, அக்னி சிறகுகள் ஆகிய படங்கள் தயாராகி வருகின்றன என்பது தெரிந்ததே.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.